எதார்த்தமான கதைக்களத்தில், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வாழை.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான வாழை திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளில் இருந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வாழை பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், வாழை திரைப்படம் வெளிவந்து 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 15 கோடி வரை வசூல் செய்துள்ளது.








