ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கூடுதல் பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக இன்று (03) முதல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதன்படி, பல்வேறு ஒலிகள் மற்றும் வண்ண மிளிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேடமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








