2025 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக்  கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன.

அந்தவகையில்  இன்று நடைபெறவுள்ள  முதல் போட்டியில்  இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரானது இந்தியாவின்  கவுகாத்தியில் Guwahati இடம்பெறுகின்றது.

இன்று ஆரம்பமாகும் 2025 ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கிண்ணக்  கிரிக்கெட் போட்டிகள் எதிர் வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

1973-ம் ஆண்டு அறிமுகமான மகளிர் உலகக் கிண்ணம் , நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.

13-வது பதிப்பை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன.

இந்த போட்டிகள் கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் கொழும்பு போன்ற இடங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருகை தர  மறுத்ததால், அதன் அனைத்து போட்டிகளும்  இலங்கையில் நடைபெறும் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

இத்தொடரில் இந்தியா, அவுஸ்திரேலியா (தற்போதைய சம்பியன்), இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணி மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் பின் முதல் -4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here