சுயேட்சைக் குழு 10, ரயர் சின்னத்தில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் நாகராசா பகீரதனின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று (04.11.2024) இடம்பெற்றது.
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை இயக்கியிருந்தால் இன்று 40 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்க முடியும்.
பழைய அரசியல் கட்சிகளின் தலைமைகள் விட்ட தவறே இன்று யாழ். மாவட்டத்தில் 21 சுயேட்சைக் குழுக்கள் உருவாக காரணம் என தெரிவித்துள்ளார்.








