தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைகள் இன்று (19) காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி பதுளை மாவட்டத்தில் பதுளை ,பசறை, மற்றும் ஹாலிஎல பகுதிகளுக்கும் ,கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாததும்பர, மற்றும் தொலுவ பகுதிகளுக்கும், மாத்தளை மாவட்டத்தில் லக்கல ,பல்லேகம ,அம்பன்கங்க ,கொரள, பல்லேபொல, மாத்தளை ,மற்றும் நாவுல பகுதிகளுக்கும் , குருணாகல மாவட்டத்தில் ரிதிகம பிரதேச செயலகப் பிரிவுக்கும் இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாத்தளை மாவட்டத்தில் யடவத்த, உக்குவெல, ரத்தோட்டை மற்றும் வில்கமுவ ஆகிய இடங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here