பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக சில கடுமையான முடிவுகளை எடுத்தது.

அதில் பாகிஸ்தான் குடிமக்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த உத்தரவின் கீழ், நேற்று (27) 12 பிரிவுகளின் கீழ் குறுகிய கால விசாக்களைக் கொண்ட பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற கடைசி நாளாக இருந்தது, மேலும் அட்டாரி-வாகா எல்லைக் கடவையில் நீண்ட வாகனங்கள் வரிசையில் காணப்பட்டன.

கடந்த வாரம்  இந்திய மத்திய அரசு விசா இரத்து செய்ததாக அறிவித்த பிறகு, ஏப்ரல் 24 முதல் அடுத்த 4 நாட்களில் 9 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 537 பாகிஸ்தானிய குடிமக்கள் எல்லையில் இருந்து இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.

கடந்த 4 நாட்களில், 14 தூதர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட மொத்தம் 850 இந்தியர்கள் பஞ்சாப்பில் உள்ள எல்லைக் கடக்கும் வழியாக பாகிஸ்தானிலிருந்து திரும்பியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை, 3 இலட்சம் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here