Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

35 ஊழியர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி…!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 35 ஊழியர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (19.10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, ஊழியர்கள் ஆடை தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட பின்னர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு திடீரென சுகயீனமுற்றுள்ளனர். இதனையடுத்து, சுகயீனமுற்ற ஊழியர்கள் நீர்கொழும்பு பொது...

மீண்டும் யாழ்தேவி ரயில்…

வடக்கு புகையிரத மார்க்கத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (21.10) முதல் மீண்டும் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, யாழ்தேவி ரயிலை அன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலையை குறைக்க முடியுமா…?

விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி எரிபொருள் விலையை 15 முதல் 20 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் குறைக்க முடியுமென முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் எரிபொருள் விலை தொடர்பில் கருத்துரைத்தவர்கள், தற்போது மக்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் எனவும் முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன...

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…!

யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆணொருவர் வெள்ளிக்கிழமை (18.10)  ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்தாம் வட்டாரம், அனல தீவு பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே  உயிரிழந்துள்ளார். ஐயனார் கோவிலில் பாடலை ஒலிபரப்பு செய்வதற்கு மின் இணைப்புக்களை வழங்கிய வேளை மின்சாரம் தாக்கியுள்ளது. ஆலயத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர்...

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்…!

பொதுமக்களிடையே எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. எலிகளின் சிறுநீரால் நீர் மாசுபடுவதுடன், எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காயங்கள் ஊடாக உடலினுள் செல்லலாம் எனவும், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக, காயங்கள் உள்ள நபர்கள் தண்ணீருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு, சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்…!

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (19.10) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ரயிலில் மோதியதால் சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு  ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் நேற்று (18.10) இந்த விபத்து...

கொலை தொடர்பில் பெண்ணொருவர் கைது…!

பெண்ணொருவரின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் வெலிவேரிய, எம்பறலுவ தெற்கு பிரதேசத்தில் 58 வயதுடைய பெண்ணொருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் தப்பிச் சென்ற இரண்டாவது சந்தேகநபரான...

விலையுயர்ந்த இரத்தினக் கற்களை வைத்திருந்த மூவர் கைது…!

புதையல் ஒன்றில் இருந்து பெறப்பட்ட பழங்கால பெறுமதியான 04 விலையுயர்ந்த இரத்தினக் கற்களை வைத்திருந்த மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப் படைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் வருண ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய கண்டி விசேட அதிரடிப்படை முகாமின் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த...

இ.போ.ச. பேருந்து சாரதி மீது தாக்குதல்…!

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.போ.ச. பேருந்தை வவுனியாவில் வைத்து மறித்த இருவர்,  பொல்லுகளுடன் பஸ்ஸில் ஏறி சாரதி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர். நேற்று மாலை 6.50 மணியளவில் இந்தக் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சாரதி, பஸ்ஸை பயணிகளுடன் வவுனியா பொலிஸ் நிலையம் கொண்டு சென்று முறையிட்டார். அதன்பின்னர் சாரதி,...

யாழில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை உயிரிழப்பு…!

யாழ்ப்பாணத்தில் பிறந்த 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது. கொடிகாமம், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டது. அதையடுத்து குழந்தையை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குப் பெற்றோர் கொண்டு சென்றனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பவளப்பாறை, வனவிலங்குகளின் அங்கங்கள் தொடர்பில் இருவர் கைது

கிரிபத்கொட மற்றும் ராகம பகுதிகளில் வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய சுற்றிவளைப்பின் போது பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பொருட்களுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த இருவரிடமும் 32 கிலோ...
- Advertisement -spot_img