Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் 9 பேர் கைது…!

பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 8 ஆகும். இதேவேளை, தேர்தல் தொடர்பில் 290 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பெறப்பட்டுள்ளன. இதேவேளை, தேர்தல் சட்டங்களுக்கு...

யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் மீட்பு…!

புத்தளம் பழைய எலுவாங்குளம் தவுசமடு வயல் பகுதியில் யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த யானைக்குட்டி வெள்ளிக்கிழமை (18.10)  முதல் சுகையீனமுற்ற நிலையில்  உயிரிழந்ததுள்ளது. உயிரிழந்த யானைக் குட்டி சுமார் 6 வயது மதிக்கத்தக்கதாகும். நிக்கவரெட்டிய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த யானைக்குட்டிக்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக  வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள்...

250 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…!

10 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் மலேசியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி 250 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவர் நியமனம்…

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக அர்ஜுன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எர்ன்ஸ்ட் அன்ட் யங் (EY) நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மூத்த பங்குதாரராகவும் ஆலோசனைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு, இலங்கை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.

மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் தூக்கி வீசப்பட்ட வீட்டின் கூரை…!

மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிப்படைந்துள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். சங்கானைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு ஜே/162 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் கூரைகள் தூக்கி வீசப்பட்ட நிலையில் வீட்டுக்குள் வெள்ளமும்...

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு…

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்றையதினம் மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தினை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன் பெற்றுக்கொண்டார். இதன்போது வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி காலத்தில் ஏற்படவுள்ள அனர்த்தங்களை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல்….

மன்னார் மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ குழு கூட்டம்   நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (18.10) மாலை  மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த  கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே. திலீபன் மற்றும் முப்படையினர், திணைக்கள தலைவர்கள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். மன்னார் மாவட்டத்தில் ஏற்பட உள்ள  வட கீழ் பருவப் பெயர்ச்சி...

இன்றைய நாளுக்கான வானிலை…

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேபோல், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்ற தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்கள்…

தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சட்டத்தரணி வி.மணிவண்ணண் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியானது தனித்து யாழில் போட்டியிடுகிறது. இதற்கமைய கட்சியின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணண் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்லூர் ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ் ஆயர் உள்ளிட்ட மதத்...

மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் 31,339 ஏக்கர் பெரும் போக செய்கை முன்னெடுக்க தீர்மானம்…

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் வருகின்ற வயல் நிலங்களுக்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான 2024-2025 கூட்டம்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(1810) உயிலங்குளத்தில் இடம் பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்,பிரதேச செயலாளர்கள்,அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது விவசாய குழு,அதனுடன் இணைந்த 30 விவசாய அமைப்புகள் அழைக்கப்பட்டு,குறித்த கூட்டம்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img