Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

தமிழ் தரப்புகளை சந்திக்காது நாடு திரும்பியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்..!

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (4) இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்புகளை சந்திக்காது நாடு திரும்பினார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை இராஜதந்திர மட்டத்தில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்த எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில்...

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவதற்கு இணக்கம் -ரிஷாத் பதியுதீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதோடு ஏனைய இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களமிறங்கவுள்ள நிலையில் அதன் வியூகங்களை வெளிப்படுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அகில...

விரைவில் இந்திய விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..!

இலங்கைக்கு வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோரின் வாழ்த்துச் செய்திகளை கையளித்திருந்தார். இதன்போது டெல்லி விஜயத்துக்கான பிரதமர் மோடியின் அழைப்பையும் வழங்கினார். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார விரைவில் இந்திய விஜயத்துக்கான அறிவிப்பை...

மீண்டும் உயர்ந்த முட்டையின் விலை..!

தற்போது நாட்டின் பல இடங்களில் முட்டைகளின் சில்லறை விலை 40 ரூபாவாகவும் சில பகுதிகளில், 45 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன், முட்டையின் விலை 30 ரூபாய்க்கும் குறைவாக இருந்துள்ளது. முட்டை உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால் முட்டையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் முட்டையின் விலை அடுத்த சில நாட்களில்...

இலங்கை ஏற்றுமதி துறைக்கு புதிய சிக்கல்..!

நாட்டில் தற்போது ஆடைத் தொழிற்சாலைகளில் பெரும் பணியாளர்கள் வெற்றிடம் நிலவுவதால் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை தேவைக்கேற்ப விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுநோய்க்கு பின்னர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த அதிகளவிலான தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு சென்றுள்ளமை மற்றும் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை இதற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது. ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது சுமார் நாற்பதாயிரம்...

வேட்பாளர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் கட்சிகள்..!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் பிரதான அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின. குறித்த நடவடிக்கைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. தேசிய மக்கள் சக்தி...

புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை..!

இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும்...

மைத்திரிபால சிறிசேனவில் சுயசரிதை வெளியீடு..!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுயசரிதையான சிஹினயாநோனிமியாவை வெள்ளிக்கிழமை (4) கொழும்பில் வெளியிட்டார் . நிகழ்வில் பேசிய சிறிசேனா, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படாதது குறித்து உரையாற்றினார். “என்னை இழிவுபடுத்த விரும்புபவர்கள் இந்த புத்தகத்தில் ஈஸ்டர் தாக்குதல் பற்றி ஏதாவது கண்டுபிடிக்க எதிர்பார்க்கலாம். நான் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட...

“பார்வையாளராக” இருப்பதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர்..!

புதிய அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சந்தர்ப்பத்திற்கு தகுதியான நிலையில் தற்போது தான் ஒரு “பார்வையாளராக” இருப்பதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். 'எக்ஸ்' (முன்னாள் ட்விட்டர்) இல் ஒரு பதிவில், கொடஹேவா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசியலில் நுழைந்ததாகவும், தனது முதல் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகவும், பின்னர் மாநில அமைச்சர்...

நாளை ஆரம்பமாகவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு..!

இலங்கையில் 15 ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் வீடமைப்புக்கான தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நாளை ஆரம்பமாகவுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா சேனவிரத்னவின் கருத்துப்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் நாடு முழுவதிலும் உள்ள வீடுகளுக்குச் சென்று முக்கிய தரவுகளை சேகரிப்பார்கள். 2012 மக்கள்தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில்,...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img