Friday, July 3, 2026
No menu items!

K Dilakshan

ரணசிங்க பிரேமதாஸ உயிருடன் இருந்திருந்தால் அவரும் ரணிலுக்கே ஆதரவளித்திருப்பார்; தலதா…!

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இப்போது உயிருடன் இருந்திருந்தார் என்றால் அவரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே ஆதரவளித்திருப்பார் என்று முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். கெஸ்பேவவில் 'ரணிலால் முடியும்' வெற்றிப் பேரணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தலதா அத்துகோரல மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து அமைச்சுப்...

தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன் இடைக்கால அரசாங்கம் அமைக்க முடியும்; வசந்த சமரசிங்க…!

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றவுடன், இலங்கை அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இடைக்கால அரசாங்கம் அமைக்க முடியும் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “ வடக்கு மற்றும் கிழக்கின்...

வாகனங்களுக்கான இறக்குமதித் தடை  நீக்கம்….!

பொதுப் பயணிகள் போக்குவரத்திற்குத் தேவையான வாகனங்களுக்கான இறக்குமதித் தடைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பேருந்துகளை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, ஏனைய வாகனங்களுக்கான தடை எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி...

விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி…!

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறைவு…!

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று நிறைவடையவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று கிடைக்கப்பெறாவிடின், உங்கள் பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி அதனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

திருடர்களின் கத்திகுத்துக்கு இலக்காகிய ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர்…!

இரத்மலானை புகையிர நிலையத்திற்குள் அத்துமீறி  நுழைந்த இரண்டு திருடர்களின் கத்திகுத்துக்கு இலக்காகி ரயில்வே பாதுகாப்பு பிரிவின் உப பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, இரத்மலானை புகையிரத நிலையத்திற்குள் அத்துமீறி  நுழைந்த திருடர்கள் இருவர் ரயில் பெட்டிகளின் உதிரிபாகங்களை திருடிச் செல்ல முயன்ற போது அதனை அவதானித்த ரயில்வே பாதுகாப்பு பிரிவின்...

இன்றைய நாளுக்கான வானிலை…

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர்...

மூன்று பிரதான வேட்பாளர்களினது ஆதரவு தொடர்ந்தும் 30 வீதம்…!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களினதும் ஆதரவு தொடர்ந்தும் 30 வீதத்திலேயே காணப்படுவதாக  ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலிற்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில்  பிரதான வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. மூன்று பிரதான வேட்பாளர்களும் தாக்குதல்கள் பதில் தாக்குதல்களிலும், வாக்குறுதிகளை வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் மூன்று பிரதான வேட்பாளர்களினதும் வாக்குறுதிகள் உச்சக்கட்டத்தை அடைந்தன.ஒவ்வொருவரும் சம்பள...

அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதமாக கருத்து தெரிவிக்கவில்லை; எம்.ஏ.சுமந்திரன்…!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதமாக கருத்து தெரிவிக்கவில்லையென தாம் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய போது மாற்றம் தொடர்பிலும், தெற்கிலே மக்கள் மாற்றமொன்றை...

எட்மண்டோ கான்சலஸ் நாட்டை விட்டு வெளியேறி ஸ்பெயினில் தஞ்சம்…!

வெனிசூலாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட எட்மண்டோ கான்சலஸ் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் ஸ்பெயினில் தஞ்சம் கோரியிருப்பதாகவும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெனிசூலாவில் கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் ஜனாதிபதி...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் சனிக்கிழமை (ஜூலை 04) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை...
- Advertisement -spot_img