Thursday, July 2, 2026
No menu items!

K Dilakshan

அரசாங்க வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் இல்லை; ரமேஷ் பத்திரன…!

அரசாங்க வைத்தியசாலைகளில் தரமற்ற மருந்துகள் இல்லை என்பதை பொறுப்புடன் உறுதிப்படுத்துவதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இங்கு மேலும் அவர் தெரிவித்தாவது, அரசாங்கத்தின் ஊடாக தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு எவ்வித வழிமுறைகளும் இல்லை....

மின்சார கட்டணம் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்படும்; அனுரகுமார திஸாநாயக்க…!

தனது நிர்வாகத்தின் கீழ் மின்சார கட்டணம் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்கிசையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் ஒடுக்கப்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்புவதில் எந்தப் பயனும் இல்லை, நாட்டை படிப்படியாக அபிவிருத்தி செய்கிறோம், முதலில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம்...

ராஜித சேனாரத்னவின் கருத்துக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு…!

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் கருத்துக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்ட சேனாரத்ன, வெளிநாட்டு ஊழியர்களை வாக்களிக்க இலங்கைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் வலையொளிக்கு அச்சுறுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு தேசிய மக்கள் சக்தி அரசியல் சபை...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவித்தல்…!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவியை இராஜிநாமா செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் கௌசல்ய நவரட்னவை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (31.08) ஏகமனதாக அழைப்பு விடுத்துள்ளது.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரின் உதவியாளர்கள் கைது…!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “சேதவத்தை கசுன்” என்பவரின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கிராண்ட்பாஸ், சேதவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 04 தோட்டாக்கள் மற்றும் 21...

சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது…!

கம்பஹா, பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுராகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன், இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்லேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுராகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 101...

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவித்தல்…!

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தங்களின் விஞ்ஞாபனங்களை தபால் மூலம் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சேவை இலவசமாக வழங்கப்படுவதாக NEC தலைவர் ஆர்.எல்.ஏ.எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் தங்களின் விஞ்ஞாபனங்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்களை எந்த கட்டணமும் இன்றி தபால் சேவை மூலம் பொதுமக்களுக்கு அனுப்ப முடியும் என்றும்...

தேசிய அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்; ரணில் விக்கிரமசிங்க…!

நாடு மீட்சியை நோக்கிச் செயற்படும் வேளையில் ஒருவரையொருவர் நோக்கிச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தி, தேசத்தை முன்னேற்றுவதற்கான கூட்டுச் செயற்பாடுகளுக்கு சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மாநாட்டில்...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடொன்றின் உரிமையை வழங்குவேன்; சஜித் பிரேமதாச…!

தமது அரசாங்கம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடொன்றின் உரிமையை வழங்கும் என சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். அனுராதபுரம் நச்சதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் பிரேமதாசவின் கட்சியைச் சேர்ந்த முன்னணி ஊழியர்களும், சமகி ஜன சந்தனயாவுடன் இணைந்த பல கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். சஜித் பிரேமதாச தனது உரையில் கொள்கை ரீதியான அரசியல்...

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்ய முயன்றவர் கைது…!

திருகோணமலை, நிலாவெளி கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்ய முயன்ற நபரொருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களை வைத்திருந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது,  72  பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 1865 கிலோ கிராம் சட்டவிரோதமாக பிடிபட்ட...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img