Wednesday, July 1, 2026
No menu items!

K Dilakshan

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி…!

கல்கிசையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கல்கிசை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை, அநுராதபுரம், மாத்தளை மற்றும் கினிகத்தேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ...

ஆணொருவர் சடலமாக மீட்பு…!

கொழும்பு, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெள்ளவத்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை…!

ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை  2,400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் மற்றும் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக  டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலுகுமார் தவறான கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததால் கோபமடைந்தேன்; திகாம்பரம்…!

இலங்கையின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்ந்து இணையத்தில் வைரலாகிய வண்ணம் உள்ளது. இதுதொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், வேலுகுமார் தவறான கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததால் தான் கோபமடைந்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் கடந்த பொதுத்...

11 இந்திய மீனவர்கள் கைது…!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் பருத்தித்துறை  கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை  கடற்படையினர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகு இலங்கை கடற்படையினரால் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு...

தெரணியகல தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளர் நியமனம்…!

கேகாலை மாவட்டம், தெரணியகல தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக எம்.பரணிதரன் நியமிக்கப்பட்டார். புதிய தொகுதி அமைப்பாளருக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்கி வைத்தார்.

பலங்கொட தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளர் நியமனம்…!

இரத்தினபுரி மாவட்டம், பலங்கொட தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய அமைப்பாளராக எம்.சந்திரகுமார் நியமிக்கப்பட்டார். புதிய தொகுதி அமைப்பாளருக்கான நியமனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் வழங்கி வைத்தார்.

கிளப் வசந்த படுகொலையுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி கைது…!

கிளப் வசந்த படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் பிரதான துப்பாக்கிதாரி ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 31 வயதான அஜித் ரோஹன என்பவரே தெஹிவளை கௌடான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அத்துருகிரிய பிரதேசத்தில் இருந்து வீடொன்றை வாடகைக்கு எடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பஸ்ஸில் கதிர்காமத்திற்கு அழைத்துச்...

அருட்தந்தை றமேஸ் அடிகளாருக்கு கலாநிதி பட்டம்..!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருட்தந்தை.  றமேஸ் OMI அடிகளார் சமீபத்தில் Overseas Campus of Ceylon  இல் முகாமைத்துவக் கற்கையில் தனது PhD கற்கையினை நிறைவு செய்துள்ளதுடன் நேற்று  (21.08.2024) கொழும்பு BMICH இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலாநிதிப் பட்டம் வளங்கிக் கெளரவிக்கப்பட்டார். இவர் தனது இளம்வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை (BBA)...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக  விளையாட்டு விழா.. 2024.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும், இணைந்து நடாத்திய பிரதேச மட்ட விளையாட்டு விழா 23.08.2024 நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் மருதங்கேணியில்  பிரதேச சபை பொது மைதானத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் ஆரம்பமானது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்களவிளக்கேற்றி...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img