Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

மாணவியை பாலியல் சேட்டைக்கு தூண்டிய அதிபர்…!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்தின் அதிபர் 15 வயது  மாணவி ஒருவரை பாலியல் சேட்டைக்கு தூண்டிய சம்பவம் தொடர்பாக அப்பாடசாலையின் அதிபர்  ஹட்டன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (25.10.2024) மாலை இவர் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையின் மாணவி ஒருவர் அதிபருக்கு வாட்ஸ்அப்  ஊடாக அனுப்பிய...

கட்டுக்கரை விவசாயிகளின் சவால்கள் தொடர்பில்  ஆராய்வு…!

வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சம்சோன் ஜெறோம் நேற்றையதினம் (25.10.2024) கட்டுக்கரை குளத்தின் கீழ் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில்   ஆராய்ந்துள்ளார். மன்னார் அடம்பன் கன்னாட்டியில் விவசாயிகளுடன் சந்திப்பில் கட்டுக்கரை குளத்திற்கான நீர் வரத்தினை எதிர்காலத்தில் அதிகரிக்க செய்வதன் ஊடாக வறட்சி காலத்தில் சிறுபோக...

முல்லைத்தீவில் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு…

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி செல்வராஜ் டினேசனின்  தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வானது நேற்றையதினம் (25.10.2024) காலை 10 மணியளவில் இடம் பெற்றது. இதன் போது  தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். அத்துடன் அலுவலகம் திறந்த பின்னர் முல்லைத்தீவு...

மன்னார் பரப்புக்கடந்தான் கிராமத்தில் ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு…!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்புக்கடந்தான் கிராமத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் வெள்ளிக்கிழமை (25.10) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த  யானை அண்மைக்காலமாக பரப்புக் கடன் தான் பகுதியில் பல விவசாய நிலங்கள் மற்றும் விவசாய காணிகளில் சுற்றித்திரிந்த தாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்...

இன்றைய நாளுக்கான வானிலை….

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திருகோணமலை உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கும் இடையே சந்திப்பு…!

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவுக்கும் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25.10.2024) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் .எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன், திருகோணமலை உதவி உள்ளூராட்சி ஆணையாளர்...

கிளிநொச்சியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல்…!

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (25.10)  நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடக்கு மாகாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில்...

பெண்களுக்கு எதிரான அநீதிகளை நிறுத்த வேண்டுமானால் பெண்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்; வனிதா செல்லப்பெருமாள்…

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்களை பல அரசியல்வாதிகள் மற்றும் மண் மாபியாக்களால் அழிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அநீதிகள் இடம்பெற்றுவருகின்றது. எனவே இவைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். பெண்களின் சமத்துவம் பேணப்படவேண்டும். இதற்கு குரல் கொடுக்க பெண்களாகிய நீங்கள் எங்கள் கட்சி திசைகாட்டிக்கும் எனது 8ம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு தேசிய மக்கள் கட்சியின்...

தேசியத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு பெற்றுத் தருவார்கள்; சிறீரங்கேஸ்வரன் கேள்வி…! 

தேசியம் என்பதற்கான அர்த்தம் கூட தெரியாத நிலையில் தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் இருப்பது வெட்கக்கேடானது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான சிறீரங்கேஸ்வரன் இவ்வாறானவர்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு பெற்றுத்தருவார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (25.10.2024)...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்….

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது. தமது காணாமல் ஆக்கப்பட் பிள்ளைகளுக்கு நீதி வேண்டி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- Advertisement -

Latest News

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது

காலி முகத்திடல் பகுதியில் 3000 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 37 வயதான சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...