Monday, July 13, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

நபர் ஒருவரை பலமாக தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய நடவடிக்கை…!

நபர் ஒருவரை பலமாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்நிலையில், குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இது தொடர்பான முறைப்பாட்டை பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர்,...

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தற்போதைய நிலவரம்…!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு 48 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான நிலையில், இன்று முற்பகல் 10.00 மணியளவில்  25% வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ. தர்மசிறி தெரிவித்தார். வாக்களிப்பு நடவடிக்கைகள் பிற்பகல் 4 மணிக்கு நிறைவடைந்ததன் பின்னர் குறித்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை எண்ணும்...

சுற்றுலா வலயங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்…!

சுற்றுலா வலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு பணியில் பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அறுகம்பே, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அறுகம்பேயில் உள்ள சுற்றுலாத் தலங்கள்...

மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் உயிரிழப்பு…!

வெயங்கொடை, அலவல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) மின்சாரம் தாக்கி ஆறு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல பொலிஸார்  தெரிவித்துள்ளனர். வெயங்கொடை, அலவல பிரதேசத்தைச் சேர்ந்த 06 வயதுடைய தேஜான் தினுவர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். இது தொடர்பில் தெரியவருவதாவது, இந்த சிறுவன் தனது வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது சமையல் அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழ்...

புத்தளம், கற்பிட்டி பகுதியில் விபத்து; இளைஞன் பலி…!

புத்தளம், கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2014) இரவு இடம்பெற்றுள்ளது. தலவில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார்...

யாழில் கஞ்சாவுடன் ஒருவர் கைது…!

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் மாவட்ட  பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2024) சந்தேகநபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அராலி வீதி, பொம்மைவெளி பகுதியில் சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் 7 கிராம்...

மஹமோதர கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு…!

காலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹமோதர கடற்கரை பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை (25.10.2024) பிற்பகல் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். 60 வயது மதிக்கத்தக்க 05 அடி 03 அங்குலம் உயரமுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த வித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக கராப்பிட்டிய...

16 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்…!

யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த 16 தமிழக மீனவர்களும் கடந்த புதன்கிழமை இரவு நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான மீனவர்கள்  விசாரணைகளின் பின்னர் வியாழக்கிழமை (24.10.2024) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி...

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று….!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காலி மாவட்ட செயலகம் உள்ளிட்ட அனைத்து வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க...

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதல்; ஒருவர் வைத்தியசாலையில்…!

முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதுண்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு விசுவமடு பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் இரு குழுக்களாக மோதினர். குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் விசுவமடு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
- Advertisement -

Latest News

அமெரிக்கா-ஈரான் மோதல்:சர்வதேச எண்ணெய் விலையில் கடும் அதிகரிப்பு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவ தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக இன்று (திங்கட்கிழமை)...