Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

இரண்டு மணிவரையிலான வாக்களிப்பு வீதம்….!

தற்போது இடம்பெற்று வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாடளாவிய ரீதியில் மொத்தமாக இதுவரையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, பிற்பகல் இரண்டு மணிவரையிலான நிலவரம் கீழே,

கிளிநொச்சியில் முன்னாள் எம்.பி. சந்திரகுமார் வாக்களிப்பு..!

ஐனாதிபதி தேர்தல் 2024 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். திருநகர் வடக்கு பொது நோக்கு மண்டபத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் அவர் தனது வாக்கினை அளித்துள்ளார்.

இன்று மதியம் 1 மணி வரையான வாக்களிப்பு வீதம்…!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. 22 தேர்தல் மாவட்டங்களிலும் இன்று (21.09) காலை 7 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மதியம் 1 மணி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் கீழே,

ஒரு மணிவரை 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவு!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. 22 தேர்தல் மாவட்டங்களிலும் இன்று (21) காலை 7 மணியளவில் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மதியம் 1 மணி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் கீழே வன்னி 46.82, திருகோணமலை...

வெளிநாடு செல்ல அனுமதிமறுக்கப்பட்ட டான் பிரியசாத்..!

டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்த டான் பிரியசாத் நேற்று (20) இரவு கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டார். வெளிநாடு செல்ல அவருக்கு எதிராக  நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் நேற்று இரவு...

அம்பாறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 30 வீதம் வாக்குப்பதிவு..!

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சுமூகமாகவும் மந்த கதியிலும் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை அம்பாறை மாவட்டத்தின் வாக்களிப்பானது 30 வீதமாக காணப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம  தெரிவித்தார். அம்பாரை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்க தகுதி  பெற்றிருந்தனர்.சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528  வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.அம்பாறை...

கோப்பாயில் வீடு எரிந்து குடும்பப் பெண் பரிதாபமாக மரணம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்வேலி பகுதியில் வீடு எரிந்து பெண்ணொருவர் இன்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எரிவாயு கசிவினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகிறது. பருத்தித்துறை வீதி, நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த பரயோகஜெயம் (வயது 71) சரஸ்வதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் லெனின் குமார் ,குறித்த பகுதிக்கு விஜயம் செய்து சடலத்தை...

ஜனாதிபதித் தேர்தல் 2024 – பிந்திய நிலைவரம்

இன்று நண்பகல் 12 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக.. கம்பஹா - 52%, யாழ்ப்பாணம் - 35%, முல்லைத்தீவு - 46%, வவுனியா - 51%, மன்னார் - 40%, பதுளை - 40%, இரத்தினபுரி - 58%, கேகாலை - 49%, மட்டக்களப்பு - 23%, திருகோணமலை - 51%

புத்தளத்தில் நண்பகல்வரை 42% வாக்குகள் பதிவு!

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்றுநடைபெற்று வரும் நிலையில், புத்தளம் மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 42 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் தெரிவித்தார். புத்தளம் மாவட்டத்தில் தேர்தல் நிலைவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதுதொடர்பில்...

திருகோணமலை மாவட்டத்தில் 51.7 வீதமான வாக்குப்பதிவு….!

திருகோணமலை மாவட்டத்தில் இன்று (21.09) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 51.7 வீதமான வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 155,713 பேர் பகல் 12 மணி வரை வாக்களித்துள்ளனர். இது 51.7 வீதமாகும். குறிப்பாக, சேருவில தேர்தல் தொகுதியில் 44,871 (55.9 வீதம்) வாக்குகளும், திருகோணமலை...
- Advertisement -

Latest News

நீர்கொழும்பு சிறை கலவரம்: 700 கைதிகள் ஏனைய சிறைகளுக்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வன்முறையை தொடர்ந்து, அங்கிருந்த சுமார் 700 கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக...