Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

தேர்தல் தொடர்பாக காலி மாவட்டத்தில் 71 முறைப்பாடுகள்…!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று காலை வரை காலி மாவட்டத்தில் 71 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தேர்தல் முறைப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இந்த புகார்களில் பெரும்பாலானவை சுவரொட்டி பதாகை காட்சிப்படுத்துதல், அனுமதியின்றி கூட்டங்கள் நடத்துதல் போன்றவை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. வேட்பாளர்களின் புகைப்படங்களையோ, வாக்குச் சின்னங்களையோ சாதாரண அலுவலகத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் வைக்கக்...

கம்பி வலையில் சிக்கிய சிறுத்தை…!

மஸ்கெலியா,மவுசாகல லக்கம் பிரிவிலுள்ள புதிய பாலத்துக்கு அருகாமையில், சிறுத்தையொன்று கம்பி வலையில் சிக்கியுள்ளது. சிறுத்தை வலையில் சிக்கி இருப்பதைக் கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து நல்லதண்ணி வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

களுத்துறையில் திருட்டு சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது…!

களுத்துறை, பேருவளை நகரத்தில் உள்ள மின் உபகரணங்களை விற்பனை செய்யும் நிலையம் ஒன்றிலிருந்து 27 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்  திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவை, பாணந்துறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து, குறித்த விற்பனை...

ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இலங்கை தேசிய இளைஞர் மாநாட்டில் தேர்தல் சட்ட மீறல்கள்..!

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இலங்கை தேசிய இளைஞர் மாநாட்டில் தேர்தல் சட்ட மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மஹரகம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தேர்தல் சட்ட விதிகளை...

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது; தபால் திணைக்களம்..!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இராணுவத் தளங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இன்னும் விநியோகிக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த வாக்குச் சீட்டுகள் நாளை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 712,318 அரச துறை ஊழியர்கள் 2024...

வாகனத்துடன் மோதிய காட்டு யானை..!

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் காட்டு யானை ஒன்று வாகனத்தில் மோதியுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. சுமார் 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை அதிகாலையில் யானைக்கூட்டத்துடன் வீதியைக் கடக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என வனஜீவராசிகள் அலுவலகம் நம்புகிறது. வாகனத்தில் மோதிய குட்டி யானையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அதற்கமைய, யானைக்கு தேவையான...

இராணுவ சிப்பாய் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு..!

பத்தரமுல்ல அக்குரேகொட இராணுவத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது...

போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர்கள் கைது..!

திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வர்த்தகருமாக கருதப்படும் கரந்தெனிய சுத்தாவின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுரவில சந்தியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைத்துப்பாக்கியுடன் 01 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும்...

நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை; நாமல் ராஜபக்ச..!

நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை நான் யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளேன்,யாழ்ப்பாணத்தினதும் நல்லூர் ஆலயத்தினதும் கலாச்சார முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டே நான் இவ்வாறு தீர்மானித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். புனிதமான தருணங்களில் பாரம்பரியங்களை பேணுவது அவசியம் என...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடு…!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஓ வகை குருதி தட்டுப்பாடு நிலவுவதாக மாவட்ட வைத்தியாலையின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது. மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியில் O+  மற்றும் O- இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு காணப்படுகிறது. எனவே குருதி கொடை வழங்கும் அன்பர்கள் மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் தொடர்பு கொண்டு தினமும் காலை 9 மணி தொடக்கம்...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...