Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

யுக்திய நடவடிக்கையின்போது 702 பேர் கைது….!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 692 ஆண்களும் 10 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 11 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 03 பேரை புனர்வாழ்வு...

எரிபொருள் விலைகளில் திருத்தம்….!

எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் ஐ. ஓ. சி. நிறுவனம் அறிவித்துள்ளன. பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 332 ரூபாவாகும். பெற்றோல் 95 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில்...

கணவனால் மனைவி மீது துப்பாக்கிச் சூடு….!

பசறை வீதி ஹிந்தகொட பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர் கரகஹ உல்பத,வெலிமடை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார். காயமடைந்த பெண் பதுளை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த பெண்ணின் கணவரே துப்பாக்கிச்...

இன்றைய நாளுக்கான வானிலை….

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் சுமார் 75 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை...

13வது வடக்கின் நீலங்களின் சமரில், கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது….

13வது வடக்கின் நீலங்களின் சமரில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 05 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணிகள் மோதிய 13வது வடக்கின் நீலங்களின் சமரில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி ஐந்து இலக்குகளால் வெற்றி பெற்றது. 27ஓட்டங்கள் முன்னிலையில்  இரண்டாவது நாள் இரண்டாவது...

யாழ். நாகதீப ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்த சஜித்….!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குமாக வேண்டியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை (31.08) யாழ். நாகதீப ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றுக் கொண்டார்.

மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்த சஜித்….!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குமாக வேண்டியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சனிக்கிழமை (31.08) யாழ்ப்பாணத்தில் வைத்து யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டுள்ளார்.

கிளப் வசந்தவின் படுகொலை தொடர்பாக அமல் சில்வாவிற்கு விளக்கமறியல்….!

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பான விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடுவெல பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த 29ஆம் திகதி காலை அமல் சில்வா கைது...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து; ஒருவர் படுகாயம்….!

தெற்கு அதிவேக வீதியில் 118 கிலோமீட்டர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (31.08) காலை இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் காரானது வேகமாக சறுக்கிச் சென்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த...

விபத்தில் ஒருவர் பலி….!

களுத்துறை, பயாகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மக்கொன - முங்ஹேன வீதியில் குமாரகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முங்ஹேனவிலிருந்து மக்கொன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மண்மேட்டில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது, மோட்டார்...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...