Monday, July 6, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவித்தல்…!

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தங்களின் விஞ்ஞாபனங்களை தபால் மூலம் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சேவை இலவசமாக வழங்கப்படுவதாக NEC தலைவர் ஆர்.எல்.ஏ.எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் தங்களின் விஞ்ஞாபனங்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்களை எந்த கட்டணமும் இன்றி தபால் சேவை மூலம் பொதுமக்களுக்கு அனுப்ப முடியும் என்றும்...

தேசிய அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்; ரணில் விக்கிரமசிங்க…!

நாடு மீட்சியை நோக்கிச் செயற்படும் வேளையில் ஒருவரையொருவர் நோக்கிச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தி, தேசத்தை முன்னேற்றுவதற்கான கூட்டுச் செயற்பாடுகளுக்கு சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் பொது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மாநாட்டில்...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடொன்றின் உரிமையை வழங்குவேன்; சஜித் பிரேமதாச…!

தமது அரசாங்கம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடொன்றின் உரிமையை வழங்கும் என சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். அனுராதபுரம் நச்சதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் பிரேமதாசவின் கட்சியைச் சேர்ந்த முன்னணி ஊழியர்களும், சமகி ஜன சந்தனயாவுடன் இணைந்த பல கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். சஜித் பிரேமதாச தனது உரையில் கொள்கை ரீதியான அரசியல்...

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்ய முயன்றவர் கைது…!

திருகோணமலை, நிலாவெளி கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்ய முயன்ற நபரொருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களை வைத்திருந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது,  72  பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 1865 கிலோ கிராம் சட்டவிரோதமாக பிடிபட்ட...

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்…!

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து 66 நாட்களுக்கு பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நியமிக்கப்படும் ஜனாதிபதி தனக்கு பொருத்தமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என எண்ணினால் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு நடந்தால் ஐந்து...

வீடொன்றிலிருந்து பெண்ணின் இறந்த சடலம் மீட்பு…!

நான்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து பெண்ணின் இறந்த சடலம் கண்டுபிடிக்கபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயிரிக்குளம் பகுதியில் வசிக்கும் குறித்த பெண்ணின் தொலைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்காத காரணத்தால், இது தொடர்பில் ஆராயுமாறு உயிரிழந்த பெண்ணின் மகன் அயல் வீட்டு நபருக்கு அறிவித்துள்ளார். அதன்படி, குறித்த வீட்டுக்குச் சென்ற போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்ததுடன் வீட்டினுள்...

எரிபொருள் விலையை ரூபாவால் குறைப்பேன்; ஜனக ரத்நாயக்க…!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் எரிபொருள் விலையை ரூபாவால் குறைப்பதே தனது முதல் கடமை என ஜனாதிபதி வேட்பாளரும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கை...

கைப்பற்றப்பட்ட பீடி இலை பொதிகள் மற்றும் படகுகள்…!

புத்தளம், கற்பிட்டி, குடாவ கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பீடி இலை பொதிகள் மற்றும் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,042 கிலோகிராம் பீடி இலைகள்...

துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் யானையின் சடலம் மீட்பு…!

நிகவெரட்டிய கந்தேகெதர பிரதேசத்தில் துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நிகவெரட்டிய கொடுஅத்தவல காப்புப் பகுதிக்கு அண்மித்த வீடொன்றிற்கு அருகில் சுற்றித் திரிந்த காட்டு யானையொன்று மின்சார கேபிள்களினால் கொல்லப்பட்டு பின்னர் ரம்பத்தினால் துண்டு துண்டாக வெட்டி எரித்து எஞ்சிய பாகங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதேசவாசிகளுக்கு கிடைத்த...

துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு மற்றும் போதைப்பொருள் மீட்பு…!

துபாயில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட சந்தேக நபரொருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு மற்றும் போதைப்பொருள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர் கடந்த 29ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இதனையடுத்து, சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...