Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்த விஜயதாஸ ராஜபக்ஷ…!

ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஷ பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கான நீதியை வழங்கும் பொருட்டு தன்னால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ பேராயருக்கு விளக்கமளித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் நடடிவக்கை எடுப்பதாகவும் அவர்...

உடுப்பிட்டியில் இரவிரவாக துரித கதியில் போடப்படும் காப்பெட் வீதியின்நோக்கம்  என்ன????

தேர்தல் கால அவசரமா? வீதியின் தரத்தை உறுதி செய்யுமாறு மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர். உடுப்பிட்டி – வல்வெட்டித்துறை வரையிலான வீதியின் மீதி பகுதியையும் காப்பெட்டாக மாற்றி போடப்படும் வேலைகள் மிக வேகமாக இரவிரவாக இடம்பெற்று வருகிறது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திட்டம் முன்மொழிவு செய்யப்பட்டிருந்தாலும் வல்வை நாற்சந்தி வரையிலான குறுகிய வீதி தரமாக போடப்பட்டிருந்தது. அதன்...

விபத்துக்குள்ளான இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்…!

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவாலஹிந்த பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பஸ்ஸின் சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த பஸ்ஸானது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, பஸ்ஸின் சாரதி இங்கினியாகல...

யாழில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு…!

யாழ், சுன்னாகம் - சூளானை பகுதியில் உள்ள ஆலயமொன்றில் பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட நபர், வீடொன்றில் மின் மோட்டார் திருத்தச் சென்றபோது மர்மமான முறையில் உயரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் இன்று சனிக்கிழமை (24.08) உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் - சூளானை பகுதியைச் சேர்ந்த 53 வயது நபரே உயிரிழந்தவர் ஆவார். இச்சம்பவம் குறித்து...

கஜமுத்துடன் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் கைது…!

பதுளை, பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியத்தலாவை வடக்கு பிரதேச செயலகத்திற்கு அருகில் கஜமுத்துடன் இராணுவ சிப்பாய் உட்பட இருவர் பண்டாரவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய...

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளும் கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம்…!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு, வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் தமது கருத்தை மாற்ற வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை…!

தனிநபர்கள் சிலர் தங்களை திணைக்கள அதிகாரிகளாக அடையாளம் காட்டி சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரிலான வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகை மூலம் மட்டுமே வரி செலுத்துதல்களை மேற்கொள்ள வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது. எந்தவொரு பணமும் அல்லது...

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே உள்ளூராட்சித் தேர்தல்…!

உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பையடுத்து உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் ஏனைய ஆணையாளர்களுடன் இணைந்து எதிர்வரும் புதன் கிழமை (28.08) கலந்துரையாடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலையும் உள்ளூராட்சி...

ஜனாதிபதி வேட்பாளர்கள் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் கொள்கைகளை முன்வைக்க வாய்ப்பு…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் தமது கொள்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் அரசாங்க வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தங்கள் கொள்கைகளை முன்வைக்க பதினைந்து நிமிடங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாடாளுமன்றத்தில் கட்சி மாறல் இடம்பெறாது; நாமல் ராஜபக்ச…!

அடுத்த நாடாளுமன்றத்தில் கட்சி மாறல் இடம்பெறாது என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ''ஒரு கட்சிக்கு கொள்கை இருக்க வேண்டும் எங்களை நம்பும் இளைஞர்கள் எங்களுடன் சேர வாய்ப்பு உள்ளது. முன்னைய அரசாங்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அது...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...