Sunday, July 5, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

திலித் ஜயவீரவின் ‘வீட்டுக்கு வரும் நட்சத்திரம்’ தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்…!

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நாடு பூராகவும் 2000 கிராமங்களை உள்ளடக்கிய 'வீட்டுக்கு வரும் நட்சத்திரம்' தேர்தல் பிரச்சாரம் இன்று (24.08) ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கருத்து தெரிவிக்கையில், பெருமளவான பணத்தை செலவழித்து பேரணிகளை நடத்துவதை விடுத்து கிராமத்திற்கு சென்று மக்களை...

ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள்…!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டிகளால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், அவற்றை தயாரிக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருடமும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வாக்குப்பெட்டிகள் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவுகளில்...

விரைவு ரயிலில் மோதி ஒருவர் பலி…!

பெலியத்தை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேருவளை ரயில் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை சிறிநிவாச பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் ரயில் கடவையை அண்மித்து பயணித்துக்கொண்டிருந்த வேளை ரயிலில் மோதுண்ட நிலையில் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து பேருவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 623 பேர் கைது…!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 623 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 611 ஆண்களும் 12 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 07 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள ஒருவரை புனர்வாழ்வு நிலையத்துக்கு...

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவித்தல்…!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 26ஆம் திகதி தபால் நிலையத்திற்கு விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டெம்பர் 04, 05 மற்றும் 06 ஆம்...

ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிகரிக்கும் ஆதரவு…!

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ஐக்கிய மக்கள் சக்தியில் ஒவ்வொருவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகி ரணிலுடன் கைகோர்த்துள்ளனர். தலதா அத்துகோரள தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன், விரைவில் ரணிலுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 300 மில்லியன் பேரம் பேசும் ரணில்; சுஜீவ சேனசிங்க…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பல கோடிகளை செலவு செய்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கம் சேர்ப்பதாக நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் உள்ள இரண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 300 மில்லியன் பேரம் பேசப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவால்...

ஊடகவியலாளர்களுக்கு  யாழ்ப்பாணத்தில் பயிற்சி வேலைத்திட்டம்..!

ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பயிற்சி வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்ய வியூ(VIEW) அமைப்பால் விசேட பயிற்சி வேலைத் திட்டம் வடக்கு ஊடகவியலாளர்களுக்கு முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் நடைபெற்ற  இந்த வேலைத்திட்டத்தில் வியூ ...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 3,400க்கும் மேற்பட்டோர் கைது…!

பாதாள உலக செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் கடந்த 5 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 3,400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்துள்ளது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையானது கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புகளைப் பேணியதாகக்...

பஸ் மோதியதில் வயோதிபர் பலி…!

கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் மணிக்கூண்டுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுகண்ணாவையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் இருந்த வயோதிபர் ஒருவர் குறித்த பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது அதே பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த வயோதிபரின்...
- Advertisement -

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...