Monday, June 29, 2026
No menu items!

கிளிநொச்சி

மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை – இந்தியா கலந்துரையாடல்!

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அறிவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும்...

இராணுவத்தினரால் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு நிரந்தர வீடு கையளிப்பு…

யாழ். பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களின் எண்ணக் கருவுக்கு அமைவாக 55 வது காலால் படை பிரிவின் வழிகாட்டலுக்கு அமைவாக, தேசியப் பாதுகாப்பு படையினரால் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தினருக்கு  கிளிநொச்சி பனங்கண்டி பகுதியில் புதிதாக வீடு ஒன்று நிர்மாணித்து கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரி விக்கும் லியனுகே...

காட்டுயானைகளிடமிருந்து பாதுகாக்கும்நோக்கில் அமைக்கப்படும் சூரியமின்கல யானை வேலி…

காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும்நோக்குடன் உலக வங்கியின் நிதியுதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தின் கீழ்  சூரியமின்கல யானை வேலி அமைக்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. பூநகரி கமநல சேவை நிலையத்திற்குற்ப செம்மன் குன்று பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த திட்டமிடமானது வடமாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி...

மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடை பேரணி! 

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபேரணி இன்று நடைபெற்றது. தருமபுர வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கண்டாவளைப் பிரதேசசெயலகம் வரை நடைபெற்று அங்கு மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு  நடைபெற்றது. பிராந்திய தொற்றுநோய் வைத்தியர் க.றஞ்சன்,  கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , சுகாதார...

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது…!

வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போவல பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன்  இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11.10) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 42 வயதுடைய...

தெற்கிலும் போட்டியிடவுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி!

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனது வடக்கு கிழக்கிற்கு அப்பால் தெற்கிலும் போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார் . கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் நேற்று (10-10-2024) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மற்றும்  மலையக பகுதியில் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்திலே...

கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா !

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா இன்று(10.10)  வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை திறந்த வெளி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பதில்...

விபத்துகளை குறைப்பதற்கு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேநீர் வழங்கி வைப்பு !

இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின்   உறக்கத்தினால் பல வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றது. இவற்றைக் கருத்தில் கொண்டு கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு உறக்க நிலையை தணிக்க கொத்தமல்லி கசாயம் வழங்கி வருகின்றார்கள் . அந்த வகையில் கிளிநொச்சி பொலிஸ் விரயம்...

தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் இன்று (03.10.2024)  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்தானது ஆடை தொழிற்சாலைக்காக பணியாளர்களை ஏற்றி கிளிநொச்சி நோக்கி பயணித்த பேருந்தில்   தலை கவசம் அணியாத நிலையில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் எதிரே வந்த பேருந்தில்   மோதியதில் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு குழுக் கூட்டமானது மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் இன்று 02.10.2024 மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி Dr.க.றஞ்சன் அவர்களால் டெங்கு நோய்தாக்கம் மற்றும் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்தார். வடகீழ் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் கிளிநொச்சி...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img