Sunday, June 28, 2026
No menu items!

கிளிநொச்சி

பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை (12) விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் இவர் பங்கேற்கவுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், தொடர்ந்து, சுன்னாகத்தில்...

திருமுருகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய விபத்து!

முல்லைத்தீவு ஏ-09 வீதியில் திருமுருகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று (11.07.2024) அதிகாலை  விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும்  ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையர்ஸ் ரக வாகனம் ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றுடன் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக...

கிளிநொச்சி அருள் மிகு கந்தசுவாமி ஆலயத்தின்  மஹா கும்பாபிஷேக நிகழ்வு !

கிளிநொச்சி அருள் மிகு கந்தசுவாமி ஆலயத்தின்  மஹா கும்பாபிஷேக நிகழ்வு இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ மஹா கும்பாபிசேகம் சிங்கல லக்கினமும் மக நட்சத்திரமும் சித்தாமிர்த யோகமும் கூடிய சுபவேளையாகிய 9.02 மணி முதல் 10.31 மணி வரையா சுபமுகூர்த்த வேளையில் இந் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பல மக்களும்...

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு திருவிழா!

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு நாளைய தினம்10.07.2024 நடைபெறவுள்ள நிலையில் இன்றைய தினம் எண்ணெய்க்காப்பு சாத்தல் அதிகாலை ஐந்து மணி முதல் நடைபெற்று வருகிறது. இந் நிலையில் பெருமளவு அடியவர் எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றனர்.

சீன அரசாங்கத்தின் பொருத்து வீட்டுத்திட்டம்..!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின்  வீடுகள் அமைப்பதற்காக எட்டு பாரஊர்திகளில் பொருத்து வீடுகள் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டன. குறித்த பொருத்து வீடுகளைக்கொண்ட பாரஊர்தியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பார்வையிட்டார். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 64வீடுகள் இவ்வாறு  வழங்கப்படவுள்ளது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களுடன்  அதன் சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்..!

மணல் அகழ்விற்க்கு அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களுடன்   அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பொலிசாருக்கு 05.07.2024 கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைவாக கல்லாறு பகுதியில் அனுமதி பாத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணித்த நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளுமே  கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை மூலம் கைது...

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லிப்பளை மக்கள் எதிர்ப்பு போராட்டம்..!

குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லிப்பளை மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதே செயலாளர் பரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பிரதேசத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த குப்பைகள் சில நாட்களுக்கு முன்னர் தீயிடப்பட்டுள்ளது. இதனால் அல்லிப்பளை பிரதேச மக்கள் புகை மற்றும் துர்நாற்றம் காரணமாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த...

கிளிநொச்சியில் கோர விபத்து – குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலி..

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குப்பட்ட பரந்தன் - பூநகரி வீதியில் நேற்று மதியம் (06) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப்ரக வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் குடமுருட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த...

அக்கராயன் குளத்தின் பின் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு ஐயங்கன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காட்டுப்  பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றுப் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது  கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிேலேயே  மீட்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஐயங்கன் குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சமூர்த்தி குடும்பங்களுக்கு இலவச ஆங்கில டிப்ளோமா பாடநெறி ஆரம்பம்..!

அனைவருக்கும் கல்வி எனும் தொனிப்பொருளில் சமூர்த்தி திணைக்களத்துடன் இணைந்து தேசிய சமூக வளர்ச்சி நிறுவனம் கிராம மட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு சர்வதேச மொழி  திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (05) கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் ஆங்கில டிப்ளோமா பாடநெறி ஆனது சமூர்த்தி குடும்பங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 40 மாணவர்களுக்கு 150 மணி நேரம் ஆங்கில...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img