Saturday, June 27, 2026
No menu items!

கிளிநொச்சி

கிளிநொச்சியில் 68 வயது வயோதிப பெண் வெட்டிக் கொலை!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 68 வயது வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். விஜயரத்தினம் சரஸ்வதி என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், வீட்டில் தனிமையில் இருந்தபோது இந்தச் சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை...

ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்து- ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில்   மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இச் சம்பவமானது நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி திசையிலிருந்து யாழ் திசை நோக்கி பயணித்த காரும் - யாழ் திசையிலிருந்து கிளிநொச்சி திசை நோக்கிப்...

கிளிநொச்சி பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்..!!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு முன்னெடுத்துள்ள சமஸ்டி தீர்வை வலியுறுத்திய வடக்கு கிழக்கு மாகாணங்களில் 100நாள்  முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் ஒன்பதாவது நாளான இன்று09.08.2025 கிளிநொச்சி பளை பகுதியில் சமஷ்டி தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (கிளிநொச்சி நிரூபர் ஆனந்தன்)

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

A9வீதி கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக நேற்றிரவு 8.30மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான கப்ரக வாகனம் வீதியை கடக்க முற்பட்டவர் மீது மோதியதியதிலேயே  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 55வயதான திருகோணமலையைச்சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பரந்தன் பகுதியில் டிப்பர் மோதியதில் பெண் உயிரிழப்பு – சாரதி மீது பொதுமக்கள் தாக்குதல்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தொன்றில் இன்று 31.07.2025 பெண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது யாதெனில் கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி...

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: புதிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று செவ்வாய்க்கிழமை (29.07.2025) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுத்...

கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர் உயிரிழப்பு!

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர் ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழக விவசாயக் பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ் 34 வயதுடைய காவலர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த பாதுகாவலர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம்...

சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!!

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு! தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன...

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கிளிநொச்சி விஜயம்!

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் 25.07.2025 கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி வலய கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது இதில் விசேடமாக விஞ்ஞானம் ஐ.சி.டி...

பேருந்துகளில் முறைப்பாட்டு இலக்கத்துடன் விழிப்புணர்வு பிரசுரம் ஒட்டும் பணி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கீழ், பொது மக்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் இலக்கம் கொண்ட விழிப்புணர்வு பிரசுரங்களை பேருந்துகளில் ஒட்டும் செயற்பாடு இன்று கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதியின் பரிந்துரை அடிப்படையில், பொது போக்குவரத்து சேவையின் போது மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பில் முறையிடுவதற்கான வாய்ப்பு வழங்கும் நோக்கில், இந்த இலக்கம்...
- Advertisement -spot_img

Latest News

 நாய் கொல்லப்பட்ட சம்பவம்: இருவர் கைது!

வத்துவ, பொதுபிட்டிய பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு முன்னால் கடந்த 2025-ம் ஆண்டு ஒகஸ்ட் 7-ம் திகதி நாய் ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான...
- Advertisement -spot_img