Thursday, March 12, 2026

துப்பாக்கிச் சூடு

தங்காலை: துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் உயிரிழப்பு — போதைப்பொருள் குழுவினருக்கிடையிலான தகராறு காரணமா?

தங்காலை–உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் நேற்று (18) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்திற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. காவல்துறை தகவலின்படி, சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் வெளிநாட்டில் வசிக்கும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான உனகுருவ சாந்தவின் நெருங்கிய உறவினர்கள்—அவரது மாமாவும் அத்தையும் ஆவர். உயிரிழந்தவர்கள் முறையே 68 மற்றும் 59...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு: குற்றத்துக்கு உதவியதாக 32 வயது பெண் கைது!

கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு பெண் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் குற்றவாளியுடன் இந்த பெண் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை எளிதாக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு அவர் வாகனம் ஒன்றை வழங்கியதோடு,...

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர் ஆரம்பத்தில் அம்பலாங்கொட நகர சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டார். எனினும், காவல்துறை பின்னர் வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் அம்பலாங்கொட மோதரை தேவாலயத்தின்...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு – இளைஞர் ஒருவர் காயம்!!

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப்பகுதியில் நேற்று (24) இரவு ஒரு பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், தென்மராட்சி, கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழப்பட்ட மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பொலிஸார் இடைமறிந்த போது, உழவு இயந்திரம் பொலிஸாரின் கட்டளையை மீறி...

ஹிக்கடுவ பகுதியில் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடு!!

ஹிக்கடுவ, மஹவத்த பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (20) இரவு ஹிக்கடுவ, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 4–5 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை...

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு!

மாத்தறை மாவட்டத்தின் வெல்லமடம பகுதியில், பொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற மோட்டார் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். வீதித் தடையில் இருந்த பொலிஸார், வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டியபோதும்,  நிற்காமல் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் வாகனத்தின் மீது நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், குறித்த வாகனம் ஜனராஜா...

சிட்னியில் துப்பாக்கிச்சூடு – 20 பேர் காயம், 60 வயது நபர் கைது!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பரபரப்பான தெருவில் துப்பாக்கிச் சூடு நடத்தி 20 பேரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் 60 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தகவலின்படி, அவர் சுமார் 50 முதல் 100 தடவைகள் வரை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். எனினும், இந்தச் சம்பவம் பயங்கரவாதம் அல்லது கும்பல் நடவடிக்கைகளுடன் எந்தவித தொடர்பும் இல்லையென அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 12 உயிரிழப்பு!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) மக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த வன்முறையில் குறைந்தது 12 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2021க்குப் பிறகு PoK பகுதியில் எழுந்துள்ள மிகவும் கடுமையான அமைதியின்மைக் சூழ்நிலையாக இது கருதப்படுகிறது. பாகிஸ்தான் அரசு 38 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதைக் தொடர்ந்து தொடங்கிய...

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி!

ஜெருசலேமின் புறநகர்ப் பகுதியான ராமோட்டின் வடக்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நெரிசலான பேருந்து நிறுத்தத்தை குறிவைத்து இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பின்னர் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தாக்குதலாளர்கள் இருவரும் உயிரிழந்ததாக இஸ்ரேலிய காவல்துறை அறிவித்துள்ளது. சம்பவத்தில் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களே...

மாளிகாவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு!

மாளிகாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை காவல்நிலையத்துக்கு அருகிலுள்ள முச்சக்கர வண்டி உதிரிபாக விற்பனை நிலையமொன்றில் பணிபுரிந்துவந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். உந்துருளியில் பிரவேசித்த இருவரால் ரீ 56 ரக துப்பாக்கியினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

- Advertisement -spot_img
Verified by MonsterInsights