Thursday, June 25, 2026
No menu items!

மேலதிக விசாரணை

வவுனியாவில் விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!

வவுனியா நகரில் உள்ள ஒரு விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து நேற்று (11) ஆண்னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அதே விற்பனை நிலையத்தில் ஊழியர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இரவு வீட்டிற்குச் செல்ல முடியாத காரணத்தால் குறித்த நபர், விற்பனை நிலையத்தின் மேல் மாடியில் தங்கியிருப்பதாகவும், மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர் வவுனியா...

பெற்றோல் பவுசர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக் கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் பெற்றோல் பவுசர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்கு முன் நேற்று (05) இரவு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் தேவாபுரம் பகுதியில் வேலை முடிந்து துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் சித்தாண்டியை சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை...

கொஸ்கொட பிரதேசத்தில் வீடொன்றின் மீது துப்பாகிச் சூடு!

கொஸ்கொட, மஹா இந்துருவ பிரதேசத்தில் வீடொன்றின் முன்பாக துப்பாக்கிச் சூடு முயற்சி இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீட்டிற்கு வெளியேயும் பின்னர் வீட்டிற்குள்ளும் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி டிஸ்சார்ஜ் செய்யத் தவறியதால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிஸ்டல்...

வீடொன்றில் தீ விபத்து; ஒருவர் பலி!

கொஸ்லந்தை பூனாகலை வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று (26) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். களு ஐயா என அழைக்கப்படும் 73 வயதுடைய சைமன் சில்வா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சில காலத்திற்கு முன்னர் அஹங்கம பிரதேசத்தில் இருந்து கொஸ்லந்தவிற்கு வந்து வியாபாரம் செய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார்...

நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

அஹுங்கல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவரும், இரண்டு  சிறுமிகளும் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் அவர்களை மீட்டுள்ளனர். எவ்வாறாயினும், ஆபத்தான நிலையில் இருந்த 54 வயதான உக்ரைன் ஆண், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிர் பிழைத்த...

பாடசாலை மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவன் மருத்துவமனையில்!

சர்வதேச பாடசாலையொன்றின் தரம் 08 ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் புதன்கிழமை (ஜனவரி 15) பாடசாலையின் கட்டிடமொன்றின் 05 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வத்தளையில் வசிக்கும் மாணவி, கீழே ஒரு மாடியில் இணைக்கப்பட்ட ஃபைபர் கூரையில் விழுந்ததால், அவருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து...

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்த நபர் கைது!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து 40 வகையான போதைப்பொருட்களை விற்பனை செய்ய முயன்ற நபரொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலிபென்ன பட்டேகொட, வலகெதர பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 35 வயதுடையவர் என பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்...

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு!

அநுராதபுரம், கல்கிரியாகம பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (27) மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர். கல்கிரியாகம , புப்போகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனது வீட்டில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை...

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் விபத்து !

புனேவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (26) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கடும் மழை பெய்துவரும் இந்நாட்களில் சாலை வழுக்கும் நிலையில் காணப்படுவதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண் இதய நோயாளி என்றும்,...

சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (13) இடம்பெற்றுள்ளது. காலி, அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். இந்த கைதி சிறைச்சாலையின் சமையல் அறையில் உணவுகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img