Saturday, April 18, 2026
No menu items!

அசோக ரன்வல

உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தாத சபாநாயகர்..!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபாநாயகருக்கு உரிய உத்தியோகபூர்வ இல்லத்தை இதுவரையில் பயன்படுத்தவில்லை என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி அவர் 10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். எனினும், அன்று தொடக்கம் இன்று வரையில் அவர் நாடாளுமன்றத்திற்கு அருகிலேயே உள்ள சபாநாயகர் இல்லத்தை பயன்படுத்தவில்லை. நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் மாத்திரமன்றி...

புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்ரமரத்ன..!

அசோக ரன்வலவால் வெற்றிடமான பாராளுமன்ற சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக இன்று (16.12.2024) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று அவரது பெயர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாளை (17.12.2024) சபாநாயகர் பதவி வெற்றிடத்தை அறிவிக்கும் போது, ​​நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்கத்தில் முன்மொழியப்படும். எதிர்க்கட்சியினாலும் சபாநாயகரின் பெயர் முன்மொழியப்படும்...

மீண்டும் நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்..!

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை (17) கூடவுள்ளது அதன்படி, தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு செய்யப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து வழமை போன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நாளை காலை 9.30 முதல் 10.30 வரையான நேரமானது வாய்வழி பதில்களை எதிர்பார்க்கும் கேள்விகளுக்கு முன்னதாகவே ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் புதிய சபாநாயகர் தெரிவு, அமர்வின்...

அரசின் அசமந்தமே சபநாயகர் பதவியின் சர்ச்சைக்கு காரணம் – ஜீவன் பதிவு..!

சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி இராஜினாமா அவசியமான ஒன்றாக இருந்தாலும், முக்கியமான பதவிகளுக்கான பிரமுகர்களை தேர்ந்தெடுக்கும்போது அரசாங்கம் தீர்மானம் எடுப்பதில் ஏற்பட்டுள்ள அசமந்தமான குறைபாட்டை பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இந்த நிலைமையை சரி செய்வதற்கான அரசாங்கத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்த...

அசோக ரன்வலவிற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை-பாரிய சிக்கலில் ஐக்கிய மக்கள் சக்தி..!

சபாநாயகர் பதவியிலிருந்து அசோக ரன்வல விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகக் கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஒழுக்க நெறியை மீறியமை தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகர் பதவி விலகியுள்ள...

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக சட்டநடவடிக்கை; சபாநாயகர் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற...

10ஆவது பாராளுமன்றத்தில் முதற்கட்ட நியமனங்களின் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு!

10ஆவது பாராளுமன்றத்தில் முதற்கட்ட நியமனங்களின் பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவித்தார். அதன்படி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் அறிவித்தார்.
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img