Saturday, April 25, 2026
No menu items!

அமைச்சர் விஜித ஹேரத்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்!

ஐக்கிய நாடுகள் சபையின் 78வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து முக்கியக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பு, ஐ.நா. பொதுச் சபையின் பக்கவாட்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெற்றது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ...

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற தயாராக உள்ளது – அமைச்சர் விஜித ஹேரத்!

மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் செயல்முறையில் ஈடுபட அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்குடனான சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது...

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய செயலணி – அரசாங்க அறிவிப்பு!

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த செயலணியை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (02) நடைபெற்ற சுற்றுலா ஊக்குவிப்பு செயலணியின் முதல் கூட்டத்தில்...

மாலைத்தீவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம்!

மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை (28) ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் உறுதியாக நாங்களே ஆட்சியமைப்போம் – விஜித ஹேரத்!

“உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 50 சதவீதம் ஆட்சி அதிகாரம் கிடைக்காத சபைகளிலும் தேசிய மக்கள் சக்தியே நிச்சயமாக ஆட்சியமைக்கும். தற்போது வரையிலும் பல்வேறு குழுக்கள் எங்களுடன் கலந்துரையாடி இருக்கிறார்கள். கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். எனவே, கொழும்பு மாநகர சபையில் உறுதியாக நாங்களே ஆட்சியமைப்போமென்று” அமைச்சர் விஜித...

இன்று வியட்நாம் பறக்கும் ஜனாதிபதி..!

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்நாட்டுக்கு இன்று சனிக்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 06 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமில் தங்கியிருப்பார். இதற்காக, ஜனாதிபதி இன்று சனிக்கிழமை இரவு நாட்டிலிருந்து புறப்படவுள்ளார். வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது...

நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தார் இந்திய பிரதமர்..!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல்...

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் உள்ளவர்களுக்கு ஓய்வூதியம்!

வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான ஒரு முறை ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாக வெளியுறவு, சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் கூறுகிறார். இதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சமூக பாதுகாப்பு வாரியத்துடன் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். "நீண்ட காலமாக நம் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வேலை...

அடுத்த விஜயமாக எமிரேட்ஸ்க்கு பறக்கவுள்ள ஜனாதிபதி..!

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்தல் உள்ளிட்ட இருதரப்பு...

சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர..!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது முதலீடு, மின் துறை, மீன்பிடித்துறை மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கான சீனாவின் உதவியுடன், பொருளாதார மீட்சிக்கான சீனாவின் ஆதரவு குறித்து விவாதிக்கப்படும் என்று...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img