Thursday, April 30, 2026
No menu items!

இராணுவ சிப்பாய்

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டில் இளைஞர் உயிரிழப்பு சம்பவம் – இராணுவ சிப்பாய்களுக்கு பிணை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  இராணுவ சிப்பாய் நால்வரும் கடும் நிபந்தனையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 07.08.2025 அன்று முத்துஐயன் கட்டுப்பகுதியில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் நால்வரை கைது செய்த ஒட்டுசுட்டான் பொலிஸார் வழக்கு பதிவு செய்து...

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது..!

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா - ஹெய்யன்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, பண்டாரகமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை பண்டாரகமை கிதெல்பிட்டிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக...

பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய இராணுவ சிப்பாய் கைது!

பதுளை - பண்டாரவளை பிரதேசத்தில் பஸ் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை இராணுவ முகாமில் கடமையாற்றிய 35 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, இலங்கை போக்குவரத்துச் சபையின் பண்டாரவளை டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று  கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப்...

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியமை குறித்து ஹம்சிகா ராஜ்குமாரின் குற்றச்சாட்டு!

எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் இழைத்த யுத்த குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலையே பெண் வைத்தியரை முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க நேரிட்டது என யாழ் தீவக பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் ஹம்சிகா ராஜ்குமார் குற்றச்சாட்டினார். நேற்று திங்கட்கிழமை அனுராதபுரத்தில் முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்...

அமெரிக்காவின் தெற்கு எல்லையில் துருப்பினர் – ட்ரம்ப்பின் அதிரடி..!

அமெரிக்காவில் தெற்கு எல்லையில் ஆயிரத்து 500 துருப்பினரை நிலைநிறுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஆயிரம் இராணுவ சிப்பாய்களும் 500 கடற்படையினரும் கலிபோர்னியாவின் சான் டியாகோவிற்கும் டெக்சாஸின் எல் பாசோவிற்கும் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தடைகளை மேற்கொள்வது மற்றும் பிற எல்லை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் சட்ட அமுலாக்கத்தில் ஈடுபட மாட்டார்கள் என அமெரிக்காவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், இரண்டு சீ-17 மற்றும்...

வட்ஸ்அப் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ சிப்பாய் கைது..!

பண்டாரவளை நகரில் வட்ஸ்அப் ஊடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சிறிய பக்கட்கள் கொண்ட 320 ஹெரோயின் போதைப்பொருள் பக்கட்களுடன் கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. பண்டாரவளை பெரேரா மாவத்தையில் தற்காலிக வாடகை வீட்டில்...

கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது!

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் பல துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று (04.11) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல சந்திக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் AK47 துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 7.62...

தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை…!

தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தை ஒருவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலன்னறுவை புலஸ்திகம பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான தந்தை தனது 15 மற்றும்...

யானை தாக்கி இராணுவ சிப்பாய் ஒருவர் பலி…!

புஞ்சிஹல்மில்லேவ பிரதேசத்தில் வயல்வெளிக்குள் புகுந்த யானைகளை விரட்ட முற்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஹடகஸ்திகிலிய, ரன்பத்வில பிரதேசத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாயான ஆர்.டபிள்யூ.எம்.ஜி.அபேரத்ன என்ற 52 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இ.எஸ்.அபேசேகர உள்ளிட்ட...

இராணுவ சிப்பாய் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு..!

பத்தரமுல்ல அக்குரேகொட இராணுவத் தலைமையகத்தில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் இராணுவத் தலைமையகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த போது தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img