Thursday, April 30, 2026
No menu items!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

15 குற்றவாளிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தலைமறைவு..!

கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளை பிறப்பித்துள்ள 82  இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புப் படையினர் இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், ஏற்கனவே இன்டர்போலுக்குத் தகவல் அளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிவப்பு அறிவிப்பு பெற்றவர்களை நாட்டின் பாதுகாப்புப் படையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்ட பாதாள உலகில் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கராவை துபாய் காவல்துறை விரைவாகக் கொண்டுவர முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் வழக்கு முடியும் வரை அவரை நாட்டிற்கு அழைத்து வர முடியாது என்று ஒரு சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இந்த வழக்கு முடிவடைய குறைந்தது 4 மாதங்கள் ஆகும் என்றும் அந்த அதிகாரி கூறினார். இலங்கையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தனது சார்பாக துபாய் சென்றுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு  இராச்சியத்துடன் ஒப்பந்தம்  மேற்கொண்ட இலங்கை!

2025 ஆம் ஆண்டு உலக அரசாங்க உச்சி மாநாட்டிற்காக ஜனாதிபதி திசாநாயக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) விஜயம் செய்தபோது, ​​இலங்கையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர் முகமது பின் ஹாடி அல் ஹுசைனி மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர்...

அடுத்த விஜயமாக எமிரேட்ஸ்க்கு பறக்கவுள்ள ஜனாதிபதி..!

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார். இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்தல் உள்ளிட்ட இருதரப்பு...

ஜனாதிபதியின் அடுத்தகட்ட வெளிநாட்டுப் பயணம்..!

தனது அடுத்த உத்தியோகபூர்வ விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றையதினம் (19/1/2025) தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏற்கனவே கிடைத்துள்ளதாக களுத்துறையில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நன்மை பயக்கும் அரசாங்க ஒப்பந்தத்திற்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் ஆராயும் என...

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் நியமிப்பு..!

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக வங்கி மற்றும் நிதித்துறையில் 37 வருட அனுபவமுள்ள வங்கியாளரான  நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1986 ஆம் ஆண்டு வங்கித்துறையில் பிரவேசித்த திரு.பிரியந்த பீரிஸ், இலங்கை, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய்) ஆகிய நாடுகளில் தனியார் வங்திரு.பிரியந்த பீரிஸ்கியாளராக...

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதி..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, ​​ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் எச்.இ. டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் காலிட் நாசர் அல் அமெரி உறுதியளித்தார். 150,000...

BRICS நாடுகளின் உறுப்புரிமையை நாடும் இலங்கை!

பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த பாடுபடும் வளர்ந்து வரும் சந்தைகளின் குழுவான BRICS நாடுகளின் உறுப்புரிமையை இலங்கை நாடுகிறது. BRICS ஆனது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் சமீபத்தில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது. பிரிக்ஸ் அமைப்பினை அணுகுவதற்கு இலங்கைக்கு பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு...

வெளியான போட்டி அட்டவணை..!

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது. இலங்கை உட்பட 10 அணிகள் பங்குபற்றும் குறித்த தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் குறித்த தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று (26.08) அறிவிக்கப்பட்டது. இதன்படி A குழுவில் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும்...

காசாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் இலங்கை தேயிலை.

பலஸ்தீனத்தின் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு தொகைத் தேயிலையை அன்பளிப்பாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. காசாக்கு அனுப்பி வைக்கப்படும் தேயிலை, பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோர் தலைமையில் பலஸ்தீனத்தின் இலங்கைக்கான தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைட்டிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள சவூதி அரேபியா, எகிப்து மற்றும்...

மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ள ரஷ்ய ஜனாதிபதி

உக்ரைனில் போர் தொடங்கிய பின்னர் ரஷ்ய ஜனாதிபதி மீது  போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால்  கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது வெளிநாட்டு பயணங்களை கடுமையாக மட்டுப்படுத்தியிருந்தார். எனினும்,  இன்று (06) மத்திய கிழக்கு நாடுகளான  சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img