கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளை பிறப்பித்துள்ள 82 இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புப் படையினர் இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், ஏற்கனவே இன்டர்போலுக்குத் தகவல் அளித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிவப்பு அறிவிப்பு பெற்றவர்களை நாட்டின் பாதுகாப்புப் படையினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்ட பாதாள உலகில் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கன்னங்கராவை துபாய் காவல்துறை விரைவாகக் கொண்டுவர முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் வழக்கு முடியும் வரை அவரை நாட்டிற்கு அழைத்து வர முடியாது என்று ஒரு சிரேஷ்ட காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்த வழக்கு முடிவடைய குறைந்தது 4 மாதங்கள் ஆகும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தனது சார்பாக துபாய் சென்றுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.








