Friday, April 24, 2026
No menu items!

கைதிகள்

சிறை கைதிகள் எண்ணிக்கையைக் குறைப்பதே இலக்கு – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே இலக்காக இருக்க வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 27வது கைதிகள் தின விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நிகழ்வில் பேசிய அமைச்சர், கைதிகளுக்காக கைதிகள் நலச் சங்கம் வழங்கும் சேவை பாராட்டத்தக்கது என்று கூறினார். சிறைகளில்...

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு..!

விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த கைதிகள் விசேட பொது மன்னிப்பில் விடுக்கப்படவுள்ளனர். அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனையில் பாதி...

ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை குறைந்துவிட்டது; இராசமாணிக்கம் சாணக்கியன்!

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரையில் உரிய பதில் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனால் ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   <!-- -->  

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் – புத்திக மனதுங்க…

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தற்சமயம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சிறைச்சாலையின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து, மாத்தறை சிறைச்சாலையிலிருந்த 26 பெண் கைதிகள் அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த சிறைச்சாலையிலிருந்து 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு முற்பட்டபோது அங்கு நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டது. பின்னர் நிலைமையைக்...

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற கைதிகள்!

பொலன்னறுவை, வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த கைதிகள் இன்று காலை தப்பிச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. தப்பியோடியவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த காவல்துறை தெரிவித்துள்ளது. 30 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட குறித்த நால்வரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது.

காஸாவில் நான்காவது சுற்று கைதிகள் பரிமாற்றம் இன்று..!

காஸாவில் நான்காவது சுற்று கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் இஸ்ரேலிய சிறைச்சாலைகளிலிருந்து 183 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளதாக பலஸ்தீன கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. காஸாவில் இன்று நான்காவது கைதிகள் பரிமாற்றம் செய்யப்படவுள்ளதோடு மூன்று இஸ்ரேலியர்களை இன்று விடுவிக்கவுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அடையாளம் கண்டுள்ளது. வெளிநாட்டில் மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் 50 பலஸ்தீனர்கள் எகிப்துடன் மீண்டும் திறக்கப்பட்ட ரஃபா வழியாக காசாவை...

கைதிகள் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படவுள்ள கைதிகள்!

கைதிகள் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பில் 350 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி நாளை (12) , சிறு குற்றங்களுக்குத் தண்டனை அனுபவித்து வரும் 350 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img