சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே இலக்காக இருக்க வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற 27வது கைதிகள் தின விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வில் பேசிய அமைச்சர், கைதிகளுக்காக கைதிகள் நலச் சங்கம் வழங்கும் சேவை பாராட்டத்தக்கது என்று கூறினார்.

சிறைகளில் தற்போது கைதிகள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், அந்த நெரிசலைக் குறைத்து தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அமைச்சர் கூறினார்.

சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரின் மனித உரிமைகளையும் பாதுகாக்கும் வசதிகளை உருவாக்குவதும் மிகவும் முக்கியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

சட்டத்தின் முன் அனைத்து மக்களும் சமம் என்றும், ஒரு அரசாங்கமாக, சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்வதன் மூலம் சமத்துவ நாட்டை உருவாக்குவோம் என்றும் அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், கைதிகள் நல தினத்தை முன்னிட்டு, நாட்டில் உள்ள 28 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய கைதிகளுக்கான ஆன்மீகம், விளையாட்டு, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சட்ட ஆலோசனை திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here