Saturday, June 13, 2026
No menu items!

கொடுப்பனவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் ரூ.1,750 ஆக உயர்வு !

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து 25 நாட்கள் பணிக்கு வருகை தந்தால், அவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் ரூ.200 வருகைக்கான கொடுப்பனவு கிடைக்கும் என்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் கீழ், தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் ரூ.1,550 ஆகவும், வருகைக்கான ரூ.200 கொடுப்பனவுடன் மொத்தம் ரூ.1,750 நாளாந்த வேதனமாகவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதனை தெளிவுபடுத்திய அமைச்சர் வசந்த சமரசிங்க...

முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும்!

ஓகஸ்ட் மாதத்துக்கான அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பகளின் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு இன்று வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

துறைமுக அதிகாரசபை ஊழியர்களுக்கு வழங்கப்படும் வருடாந்த கொடுப்பனவு 60,000 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாய் கொடுப்பனவு 160,000 ரூபாவக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிர்வாக இயக்குநர் பொறியியலாளர் கனக ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். மேலும், இந்த வருடம் வழங்கப்படவுள்ள 160,000 ரூபா கொடுப்பனவு ஏப்ரல் மாதத்தில் 80,000 ரூபாவாகவும், மீதமுள்ள...

நாடளாவிய ரீதியில் தாதியர்கள் போராட்டம்!

நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையிலுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். பாதீட்டில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். அத்துடன் மேலும் பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இன்று மதிய உணவு...

முதியோர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

அரசாங்கத்தினால் எந்தவிதமான உதவித்தொகையையும் பெற்றுக்கொள்ளாத 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியோர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபா உதவித்தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை தேசிய முதியோர் செயலகம் வெளியிட்டுள்ளது. குறித்த உதவித்தொகை  கொடுப்பனவு இன்று (20/02/2025) முதல் லழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்திற்கான உதவித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள உதவித்தொகைகளை தபால் நிலையங்கள் மற்றும் உப தபால்நிலையங்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு அஸ்வெசும பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களைத் தவிர்த்து, இதுவரை உதவித்தொகையைப்...

விவசாயிகளுக்கான நட்டஈடு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்!

கடந்த வருடம் நவம்பர் மாதம் வெள்ளத்தினால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கான நட்டஈடு இன்று (30) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து இந்த இழப்பீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை...

குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி வழங்கப்படும்; ஜனாதிபதி!

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மூடிமறைக்கப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கெக்கிராவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான பாதீடு அடுத்த மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் பாதீட்டில் அரச பணியாளர்களுக்கு வேதன மற்றும் இதர...

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் அமைச்சு வெளியிட்ட அறிக்கை..!

சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் மாதத்தின் பின்னர் கொடுப்பனவு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படையற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும்...

70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவு வழங்க தீர்மானம்!

அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முதியோர் கொடுப்பனவு பெறும் முதியோர்க்கான 3,000ரூபாய் கொடுப்பனவானது இந்த மாதத்திலிருந்து குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின்...

ஓய்வூதியம் பெறுவோருக்கு இடைக்கால கொடுப்பனவு!

ஒக்டோபர் மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோருக்கு 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. செப்டெம்பர் மாதத்திற்கான நிலுவைத் தொகையுடன், ஒக்டோபர் மாதம் கொடுப்பனவு வழங்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர அறிவித்துள்ளார். அரசாங்க ஓய்வூதியர்களுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு அண்மையில்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img