Thursday, July 23, 2026
No menu items!

சட்டத்தரணி

தனது அரசியல் வாழ்க்கைக்கு களங்கம் ஏற்படுத்தியதற்கு எதிராக 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய எம்.பி அடைக்கலநாதன்!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனது பெயருக்கும் கௌரவத்துக்கும் பங்கும் விளைவிக்கக்கூடிய விதமாக அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவதற்கும், இணைய ஊடகங்களில் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் நடவடிக்கை எடுத்ததாக கூறி, அவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக இழப்பீடு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாவது: நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் மேற்கொண்ட கருத்துக்கள்...

வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று பணிபகிஷ்கரிப்பு!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் இன்று (07) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர். யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்குள், நீதிமன்ற உத்தரவு இன்றி காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்திய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ்ப்பாண வலய உப தலைவர் குமாரவடிவேல் குருபரன், “இது சட்டத்தின்...

சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்ற புதிய பொலிஸ்மா அதிபர்!

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர், தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று குறிப்பிட்டார். பொலிஸ் துறையின்...

மன்னார் காற்றாலை செயற்திட்ட கட்டுமான பணிகளுக்கு தடை!

மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காற்றாலை இரண்டாம் கட்ட செயற்திட்டத்துக்கு எதிராக மன்னார் மாவட்டம் மாத்திரம் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்சியாக போராட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையில் காற்றாலை செயற்திட்டத்தின் கட்டுமான பணிகள் எவையும்  இனி இடம் பெறாது என மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு பொலிஸார் வழங்கிய உத்தரவாதத்திற்கு அமைவாக...

எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்காக சேவையாற்றுவோம் – சட்டத்தரணி மணிவண்ணன்..!

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று(08) இடம் பெற்றது. குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உரையாற்றுகையில், எங்களுக்கு வாக்களித்த உறவுகளுக்கு நன்றிகள். சட்ட போராட்டத்திலும் ஈடுபட்டோம். அந்த முயற்சியும் தோல்வி. 10 நாட்களே பிராசரத்திற்காக செலவு செய்தோம்....

பிள்ளையானின் வழக்கில் உதய கம்மன்பில ஆஜராவது அரசியல் சூழ்ச்சி – நளிந்த ஜயதிஸ்ஸ!

‘‘பிள்ளையானின் வழக்கில் சட்டத்தரணியாக உதய கம்மன்பில ஆஜராகியுள்ளார். கம்மன்பில வழக்கில் வாதாடுவதை நாட்டு மக்கள் கண்டதில்லை. ஆனால், பிள்ளையான் அவரின் சட்டத்தரணியாக தெரிவு செய்திருக்கிறார். பிள்ளையானின் வழக்கில் உதய கம்மன்பில ஆஜராவது வெறுமனே அரசியல் பழிவாங்கல் இல்லை. இதுவொரு அரசியல் சூழ்ச்சியாகும்’’ என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தலைக்கு எண்ணெய்...

பதவியை இராஜினாமா செய்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேஷபந்து தென்னகோனின் மனு தொடர்பான தீர்மானம் இன்று அறிவிப்பு!

தாம் கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடக் கோரி முன்னாள் காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோனினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனு தொடர்பான தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. இத்தகைய பின்னணியில், இந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் ஆறு சந்தேகநபர்களும் தங்களைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி நீதிப்பேரணை மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக காவல்துறை...

தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றில் முன்னிலையில்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் சரணடையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐ.ஜீ.பி தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான்...

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு !

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதிபதி மொஹமட் லபார் தாஹிர் தலைமையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து சட்டத்தரணிகளும் மற்றும் தனிநபர்களும் நீதிமன்ற...
- Advertisement -spot_img

Latest News

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக காணொளி வைத்திருந்த இலங்கை வைத்தியர் கைது

கனடாவின் டொரொண்டோவில் உள்ள முன்னணி  மருத்துவமனையில் பணியாற்றிய இலங்கை வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான காட்சிகள் மற்றும்...
- Advertisement -spot_img