Friday, August 14, 2026
No menu items!

சந்தேகநபர்

ஏழரைக் கோடி ரூபாவை கொள்ளையிட்டு சென்ற சந்தேகநபர் டுபாய்க்கு தப்பியோட்டம்!

மினுவாங்கொடை பகுதியில் ஏழரைக் கோடி ரூபாவுடன் கைதுசெய்யப்பட்ட பிரதான இரண்டு சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய ஒருவர் கொள்ளையின் எஞ்சிய பணத்துடன் துபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளார். மினுவாங்கொடை பகுதியில் 40 இலட்சம் ரூபாவுடன் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை பகுதியில் வைத்து,...

கொக்கேய்ன் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை கார் ஒன்றை சோதனையிட்ட போது 24 மற்றும் 32 வயதுடைய இரண்டு சந்தேகநபர்கள் 19 கொக்கெய்ன் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில்...

காதலியை கல்லால் தாக்கி கொலை செய்த நபர் கைது!

தனது காதலியை கல்லால் தாக்கி கொலை செய்த நபர் ஒருவர் இன்று பயாகல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பயாகல, பஹலகொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பயாகல தியலகொட பிரதேச கடற்கரைக்கு இருவரும் வந்திருந்த நிலையில், இருவருக்கிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும், இதன்போது குறித்த யுவதியின் தலையில் கல்லால்...

மஹியங்கனையில் புதையல் தோண்டிய நபர்கள் கைது!

மஹியங்கனை திபுலபலஸ்ஸ பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பேக்கோ இயந்திரத்துடன் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ரொட்டலவெல, திவுல்பலஸ்ஸ மற்றும் கிராதுருகோட்டை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் மூன்று சந்தேகநபர்கள் இந்த சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்...

பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்தமை தொடர்பான சம்பவத்துடன் மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் பிரதிகாவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஏற்கனவே சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதாகக் கூறப்படும் நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர்...

நிதி மோசடி வழக்கில் நாட்டைவிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் கைது!

நிதி மோசடி வழக்கில் நாட்டைவிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் டுபாயில் இருந்து இலங்கை வந்த பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கண்டியில் வசிக்கும் 32 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரியும் போது 10.8 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக...

கஞ்சாவை கொண்டு சென்ற இரு சந்தேக நபர் கைது!

பேருந்தில் கொழும்புக்கு கஞ்சாவை கொண்டு சென்ற இரு சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். பூனாவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உடனடி வீதித் தடையின் போது, ​​இரண்டு பேருந்துகளில் இருந்து 5 கிலோ 800 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றிய போது, ​​இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 45 மற்றும் 47 வயதுடைய கட்டுபொத்த மற்றும் யாழ்ப்பாணத்தை...

புதையல் தோண்டிய  நபரொருவர் கைது!

நெலுக்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மணிப்புரம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புதையல் தோண்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் அகழ்வுக்காகப் பயன்படுத்திய பொருட்களுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 68 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெலுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

9 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தர் கைது!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி - துன்னாலை பகுதியில் 9 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக...

பேருந்தை திருடிச் சென்ற நபர் கைது!

பேருந்தை திருடிச் சென்ற நபர் ஒருவர் மொரட்டுவ, ராவத்த பிரதேசத்தில் வைத்து மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், பாணந்துறை, மினுவன்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த போது திருடியுள்ளார். கைது செய்யப்பட்டவர் மினுவன்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான ஒருவராவார்.
- Advertisement -spot_img

Latest News

மிருகத்தனமாக தாக்கப்பட்டு கைவிடப்பட்ட சிறுமி மீட்பு

மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டமற்ற இடத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் 4 வயது சிறுமி ஒருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று (13)வத்தேகம - யட்டிரவண வீதியில் உள்ள...
- Advertisement -spot_img