Tuesday, July 28, 2026
No menu items!

தேசிய லொத்தர் சபை

முன்னாள் தேசிய லொத்தர் பணிப்பாளருக்கு பிணை!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டன. மேலும், வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். துசித ஹல்லொலு மற்றும் அவரது சட்டத்தரணி...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ விளக்கமறியலில் நீடிப்பு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை செப்டம்பர் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை நடத்தி வரும் கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் பிரதிவாதி சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளைப் பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

துசித ஹல்லொலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தேசிய லொத்தர் சபைக்கு சொந்தமான அரசு சொத்துக்களை குற்றவியல் முறையில் தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கு தொடர்பாக அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். துசித ஹல்லொலுவ இன்று (ஜூன் 13)...

துசித ஹல்லொலுவக்கு விளக்கமறியல்!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (6) கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரசாங்க சொத்துக்களை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக அவர் தற்போது...

துசித ஹல்லொலுவக்கு விளக்கமறியல்!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று (02) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு...

துசித ஹல்லோலுவக்கு விளக்கமறியல்!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பதவி காலத்தில் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

துசித ஹல்லொலுவ பயணித்த மகிழுந்தை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு – மேலும் மூவர் கைது!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் பயணித்த காரை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாரஹேன்பிட்டி, கிரிமண்டல மாவத்தையில் கடந்த 17 ஆம் திகதி இரவு தேசிய லொத்தர்...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் CID முன்னிலையில்!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த அறிவித்தலுக்கு அமைய, இன்று காலை 10.00 மணியளவில் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதாக துசித...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img