Friday, July 24, 2026
No menu items!

தேர்தல் ஆணைக்குழு

தற்காலிக அடையாள அட்டையை விநியோகிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை..!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை அல்லது அதற்கு சமமான வேறு ஆவணங்கள் இல்லாவிட்டால், அவ்வாறானவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை விநியோகிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கிராம சேவை உத்தியோகத்தரிடம் இரு புகைப்படங்களுடன் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதனூடாக தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இது பொருந்துமெனவும்...

கட்டுப்பணம் செலுத்திய 24 வேட்பாளர்கள்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 24 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வேட்பாளர்களும், 12 சுயேட்சை வேட்பாளர்களும் மற்றும் பிற அரசியல் கட்சிகளில் இருந்து ஒரு வேட்பாளரும் என 24 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

அமைச்சக செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைப்பு…

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களையும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்டம் தொடர்பில் அரச மற்றும் அரை அரச நிறுவனங்களின்...

தேர்தலுக்கான ஆரம்ப அச்சிடும் பணிகள் நிறைவு…!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆரம்ப அச்சிடும் பணிகள் அரசாங்க அச்சகத்தினால் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணம் தொடர்பான அச்சிடும் பணிகளை அரச அச்சகம் பூர்த்தி செய்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் அரசாங்க அச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் உதவி தேர்தல்...

ரணிலின் அதிரடி முடிவு…!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா சற்றுமுன்னர் தேர்தல் ஆணைக்குழுவில் சுயாதீன வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்….!

தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக தேர்தலை நடத்தி மக்களின் ஐனநாயக்கத்தை உறுதிப்படுத்த தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் (17.07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டாவாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு மக்களின் ஐனநாயக உரிமைக்கு சந்தர்ப்பம் வழங்காது தேர்தலை இழுத்தடிக்காது உடனடியாக...

மக்களின் ஐனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும்; பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்!

தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடாத்தி மக்களின் ஐனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவித்து அதனை நிறுத்தியது. இவ்வாறு காலத்தை இழுத்தடிக்காமல் மக்களின்...

தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு…!

எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சற்றுமுன்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். இந்த திகதியை நடைமுறைப்படுத்துவதில்  வேறு எந்த காரணமும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். மேலும் அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தின் படி, இந்த தினங்களை...
- Advertisement -spot_img

Latest News

வத்தளை பகுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் கைது

வத்தளை, பள்ளியாவத்த பகுதியில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை கோட்டை...
- Advertisement -spot_img