Tuesday, June 9, 2026
No menu items!

பிரசன்ன ரணவீர

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு  மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பகுதியில் அரசுக்கு சொந்தமான காணியை போலி ஆவணங்களை பயன்படுத்தி விற்பனை செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று (8 ) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கமைய சந்தேகநபர் இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு...

18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் – முன்னாள் இராஜாங்க அமைச்சர்!!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிரிபத்கொடை பகுதியில் உள்ள அரச காணியை போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் நீதிமன்றத்தின் பிரதான நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் பிரசன்ன ரணவீர இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு  எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில், பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரசன்ன ரணவீர இன்று காலை மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த...

செவ்வந்தி மற்றும் பிரசன்ன ரணவீர நாட்டை விட்டு தப்பியோட்டமா? – பொலிஸாரின் தகவல்!

கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி மற்றும் 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு வெளிநாட்டு பயணத் தடை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மேலும் இருவருக்கு மஹர நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்துள்ளது.

5 இராஜாங்க அமைச்சர்களை ரணில் விக்கிரமசிங்க பதவியிலிருந்து நீக்கியுள்ளார்!

கீதா குமாரசிங்க உட்பட 5 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கியுள்ளார். ஏனையவர்களில் சஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி.சானக்க ஆகியோர் அடங்குவர். அரசியலமைப்பின் 47 (3) (a) பிரிவின் கீழ் இவ் நீக்கங்கள் செய்யப்பட்டன என தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img