Friday, June 5, 2026
No menu items!

மத்திய வங்கி

உச்சத்தை எட்டிய சரக்கு ஏற்றுமதி!

சரக்கு ஏற்றுமதியின் வருவாய் 9.5 சதவீதம் (yoy) அதிகரித்து 1,224 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. இந்த அதிகரிப்பு பரந்த அடிப்படையிலானது என்றும், தொழில்துறை ஏற்றுமதிகள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 2024 இல் தொழில்துறை பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு (yoy) முதன்மையாக ஜவுளி மற்றும் ஆடைகளால் உந்தப்பட்டது, இது ஆகஸ்ட்...

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஒரு லட்சத்து 42,500 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 67,500 மில்லியன்...

கடனாக வழங்கிய பணத்தை ராஜபக்ஷ செலுத்தவில்லை: AKD தெரிவிப்பு..!

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்காகக் கடனாக வழங்கிய பணம் இதுவரையில் கிடைக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சாதாரண மக்கள் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக பல்வேறு அசௌகரியங்களை...

மத்திய வங்கி தரவுகளின் படி சுற்றுலாத்துறையில் அதீத வளர்ச்சி..!

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. குறித்த காலப்பகுதியில் இலங்கை 2.17 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 66.1 வீத அதிகரிப்பாகும் என மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதுபோல்...

சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளது; மத்திய வங்கி…!

சுற்றுலாத்துறையின் வருவாய் கடந்த ஓகஸ்ட் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சுற்றுலாத்துறையினூடாக 282.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. எனினும், கடந்த ஜூலை மாதத்தில் சுற்றுலாத்துறையினூடாக 328.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கி ஆளுநரின் ஆற்றலுக்கு A தர கௌரவிப்பு…!

குளோபல் ஃபைனான்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் மத்திய வங்கி ஆளுநர்களின் தர வரிசை தொடர்பான வருடாந்த அறிக்கைக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2024ஆம் ஆண்டுக்கான A தரத்துடன் கௌரவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவாலான காலங்களில் மத்திய வங்கியினது ஆளுநரால் வழங்கப்பட்ட விதிவிலக்கான தலைமைத்துவத்தையும்...

அர்ஜுன்மகேந்திரனை மீண்டும் அழைத்து வருவேன் ; அனுரகுமார திஸாநாயக்க!

தான் ஜனாதிபதியானால், மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றத்தால் தற்போது தேடப்பட்டு வரும் சிவப்பு பிடியாணையுடன் கூடிய அர்ஜுன்மகேந்திரனை மீண்டும் அழைத்து வருவேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!

2024 ஜூலையில் வெளிநாட்டில் உள்ள ஊழியர்களிடமிருந்து 566.8 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய 2024 ஜனவரி முதல் ஜூலை காலப்பகுதியில் மொத்தம் 3.71 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 10.3% வளர்ச்சி எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சுற்றுலாத்துறை வருமானம் 06 மாதங்களில் 1,557 மில்லியன் டொலர்களாக அதிகரிப்பு!

கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் அதிகரித்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் 1,557 மில்லியன் அமெரிக்கன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த வருமானமானது இரண்டு மடங்கு வளர்ச்சியைக் காட்டுவதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அதே வேளை, இந்த வருடத்தின்...

அதிகரித்த பணவீக்கம்…!

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 1.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜூலை மாதம் 2.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த ஜூலை மாதம் 0.44 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. இதற்கமைய பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் உறுதியான பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மூலம் துணையளிக்கப்பட்டு, பணவீக்கமானது...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img