Saturday, August 1, 2026
No menu items!

மாவை சேனாதிராஜா

மறைந்த மாவையின் பூதவுடலுக்கு ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி..!

இறைபதமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இ.தொ.கா பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இறுதி அஞ்சலி செலுத்தினார். காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (02) சென்று மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திய...

மறைந்த மாவை சேனாதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் டக்ளஸ் தேவானந்தா..!

மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி  தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியுள்ளார். உடல்நிலை பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி...

விபத்தில் சிக்கிய முன்னாள் எம்.பி கருணாகரம் பயணித்த வாகனம்..!

மட்டக்களப்பிலிருந்து  தமிழரசு கட்சியின்  மறைந்த தலைவர்  மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) பயணித்த வாகனம் இன்று 1/2/2025 திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் விபத்துகுள்ளாகியுள்ளது. திருகோணமலை உப்புவெளி  வீதியில் சர்வோதயத்துக்கு முன் உள்ள பாதைசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது வாகனத்தை நிறுத்திய போது பின்னால்...

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி நேரில் அஞ்சலி!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து இன்று அஞ்சலி செலுத்தினார். மறைந்த மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.    

மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக..!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்...

மாவையின் மறைவுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்..!

மலையக தமிழ் மக்களுக்காக இ.தொ.காவுடன் இணைந்து குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராஜா என குறிப்பிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், அன்னாரின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும் என்றும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயற்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும்...

மாவை சேனாதிராஜாவுக்கு இரங்கல் தெரிவித்த MP ஜீவன் தொண்டமான்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தூணாகவும், இலங்கை அரசியல் அரங்கில் ஒரு முக்கியஸ்தராகவும் இருந்த, மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு ஜீவன் தொண்டமான் இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான, மாவை சேனாதிராஜா ஐயா...

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்  மாவை சேனாதிராஜா  காலமானார்!

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82வது வயதில் காலமானார். தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு (29) காலமானார். இறுதிக்கிரியைகளை மாவிட்டபுரத்தில் நடத்துவதற்குத்...

மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு காரணமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் இன்று (28) காலை சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் தலைவர் நியமிப்பு..!

மாவை சேனாதிராஜா அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் இருப்பார். இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (28.12.2024) இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img