Tuesday, July 28, 2026
No menu items!

மோசடி

தொழிலாளர் அலுவலக சேவைகளை வேகமாக செய்வதாகக் கூறி பண மோசடி செய்த தரகர் கைது!

தொழிலாளர் அலுவலகத்தில் சேவைகளைப் பெற வந்த பெண்ணிடம் வேலை செய்து தருவதாகக் கூறி பணம் பறித்த தரகர் ஒருவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குற்றவியல் புலனாய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவு நேற்று முந்தினம் (12) கைது செய்துள்ளது. நாரஹேன்பிட்டி தொழிலாளர் துறையில் சேவைகளைப் பெற வருவோரிடம் “வேலைகளை விரைவாகச் செய்து தருவோம்” என்று சொல்லி...

பிரபல தனியார் வங்கியின் போலியான இணையதள மோசடி: நால்வர் கைது!

இலங்கையில் பிரபல தனியார் வங்கியின் போலியான இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கிக்கு சொந்தமான 50 மில்லியன் ரூபாய் மோசடியாக பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர்  25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை கொழும்பு தலைமை நீதிபதி அசங்க எஸ்....

மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப்படாது – ஜனாதிபதி..!

எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள். தற்போது...

மக்களுக்கு நிதி தொடர்பான கல்வியறிவு இல்லை – மத்திய வங்கி ஆளுநர்!

பிரமிட் போன்ற மோசடிக்குள் சிக்கிவரும் பெரும்பான்மையான மக்களுக்கு நிதி தொடர்பான கல்வியறிவு இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் புதிய தொழில்நுட்ப சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்தக்...

வேலை வாங்கித் தருவதாகக் கூறி மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் கைது!

தென் கொரியாவில் E-8 பிரிவின் கீழ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தீவின் பல்வேறு பகுதிகளில் தனிநபர்களிடம் 3 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நபர் ஒருவர் குருநாகல் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் மீது தீவு முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் நீதிமன்ற உத்தரவுகளைத் தவிர்க்கும்...

பணம் பறிக்கும் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளங்காட்டிக்கொண்டு, பரிசுகளை வென்றுள்ளதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி குறித்து இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு மோசடி செய்பவர்கள், தனிநபர்களிடம் பரிசு வென்றுள்ளதாக தெரிவித்து, குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம்அவர்களை தொடர்புகொண்டு பரிசுகளைப் பெற வரி அல்லது கட்டணங்களைச் செலுத்துமாறு மோசடிக்காரர்கள்...

வைப்பு பணத்தில் மோசடி – வங்கி முகாமையாளருக்கு விளக்கமறியல்..!

வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் ஒருவர் நீண்ட காலத்திற்கு நிலையான வைப்பில் பெருந்தொகை பணத்தினை வைப்பிலிட்ட பின்னர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அவர் திடீரென நாடு திரும்பி தனது நிலையான வைப்பில் உள்ள பணத்தினை...

வாகன மோசடியில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு..!

வாடகை அடிப்படையில் கார்களை வெவ்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து கொள்வனவு செய்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, அதுருகிரியவைச் சேர்ந்த 54 வயதுடைய குறித்த சந்தேக நபர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாடகை கொள்வனவு முறையின் அடிப்படையில்...

பண மோசடி குறித்து சுங்கத் திணைக்களம் விசேட அறிவிப்பு!

சுங்கத் தலைவர் ஜெனரலின் பெயர் மற்றும் பதவியைப் பயன்படுத்தி, பல்வேறு நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பணம் கோரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குறித்து இலங்கை சுங்கத் திணைக்களத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த கோரிக்கைகள் வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி, வங்கிக் கணக்கு எண்களையும் குறிப்பிட்டு, பல்வேறு காரணங்களைக் கூறி செய்யப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மோசடி...

கொரிய E8 விசா பிரிவின் கீழ் பண மோசடி..!

தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்து தனிநபர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு அல்லது தொடர்புடைய பயிற்சிக்காக எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img