Sunday, April 26, 2026
No menu items!

ரயில்வே திணைக்களம்

ரயில்வே இ-டிக்கெட் மோசடி – சி.ஐ.டியினரின் விசாரணை தீவிரம்..!

ரயில்வே திணைக்களத்தினால் இணையத்தளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20/1/2025) அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இன்றும் (19) பல ரயில் சேவைகள் இரத்து..!

இன்றும் (19) பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று குறுகிய தூரம் பயணம் மேற்கொள்ளும் 15 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தரம் இரண்டிலிருந்து தரம் 1 தரமுயர்வு செய்வதற்காக ரயில் சாரதிகளுக்கான பரீட்சை இன்று நடைபெற உள்ளது. இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களில் பல ரயில் சேவைகளை ரயில்வே...

தொடர்ச்சியாக ரயில் சேவைகள் ரத்து – வெளியானது காரணம்..!

ரயில் சாரதிகளின் தரம் உயர்த்தல் பரீட்சைக்கு தயாராகி வருவதால் இன்று (1/18/2025) காலை 08 குறுகிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று (17/1/2025) சுமார் 25 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலையக ரயில் சேவை பாதிப்பு..!

ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையே தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சேவையை சீர்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

விடுமுறைகளை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் சேவையில்..!

தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, ரயில்வே திணைக்களம் 4 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது. அதன்படி, இந்த ரயில் கடந்த 10 ஆம் திகதி முதல் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் ஏ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்புக் கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இரவு 7.30 மணிக்கு ஒரு ரயில் புறப்படும் என்றும் மற்றைய...

நூறு ரயில் நிலையங்களை க்ளீன் செய்ய திட்டம்..!

புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நூறு ரயில் நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி பயணிகளுக்கு கவர்ச்சிகரமான இடங்களாக மாற்ற ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாது கட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு ரயில் நிலையங்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இது க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின்...

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிக்கை..!

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், ரயில் நிலையத்திற்குள் பிரவேசிக்கும் போது மற்றும் பயணச்சீட்டைச் சரிபார்க்கும்...

கடலோர ரயில் சேவையில் பாதிப்பு!

கடலோரப் பாதையில் இன்று ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்மலானைக்கும் கல்கிசைக்கும் இடையில் தண்டவாளம் உடைந்ததன் காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் புகையிரதசேவை இரத்து!

இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக புகையிரத பாதையின் இரவு நேர அஞ்சல் புகையிரதங்கள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு கொழும்பு - கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு - கோட்டை வரையான இரவு நேர அஞ்சல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மோசமான காலநிலை...

ரயில் சேவைகளில் பாதிப்பு!

பதுளை - பண்டாரவளை ரயில் பாதையில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பதுளைக்கு செல்லும் ரயில்கள் பண்டாரவளையில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img