Monday, April 20, 2026
No menu items!

வயோதிபப் பெண்

மட்டக்களப்பில் மூதாட்டியிடம் ரூ.3 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலி பறிப்பு!

மட்டக்களப்பு நல்லையா வீதியில் நேற்று (24) காலை இடம்பெற்ற வன்முறையுடனான தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவத்தில், 78 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அந்தப் பெண் தனது வீட்டின் முற்றத்தில் சுத்தம் செய்துக் கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரது கழுத்தில் இருந்த ரூ.3 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை பறித்து,...

வயோதிபப் பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

பொலன்னறுவை,மெதிரிகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் எரிந்த நிலையில் வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர். மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வயோதிபப் பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வயோதிபப் பெண் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டிலிருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் பிரதேசவாசிகளும், வயோதிபப் பெண்ணின் மகளும் குறித்த...

யாழில் வயோதிபப் பெண்ணிடம் மோசடி!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண்ணொருவரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் குறித்த வீட்டுக்கு சென்று, தான் கமநலசேவை திணைக்களத்தில் இருந்து வருவதாகவும், விவசாய அழிவுக்கு நட்ட ஈடாக குறித்த பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,...

யாழில் மனவிரக்தியில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.   யாழ்ப்பாணம் - குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த ராஜசுந்தரம் கமலாதேவி என்ற 80 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்துள்ளார். கண்பார்வை குறைபாடு காரணமாக மனவிரக்தியில்...

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

எப்பாவல, கடியாவ யாய 10 ஆம் பகுதியில் இன்று (12) காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 84 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை குறித்த பெண் தனது வீட்டில் இருந்து வெளியில் முற்றத்துக்கு வந்த போது தோட்டத்தில் மறைந்திருந்த காட்டு யானை பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸார்...

97ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற பெண்!

இலங்கையைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் தனது 97ஆவது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லீலாவதி தர்மரத்ன கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் பௌத்த கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக, பட்டம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லீலாவதி தர்மரத்ன,...

முச்சக்கரவண்டி மோதியதில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்….!

பாதுக்கை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்கம்பிட்டிய பகுதியில்  மீபேவிலிருந்து இங்கிரிய நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில்  குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது 79 வயதுடைய  வயோதிபப் பெண் காயமடைந்துள்ள நிலையில் ஹோமாகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரது சடலம் ஹோமாகமை வைத்தியசாலையில்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img