Monday, April 27, 2026
No menu items!

விளக்கமறியல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள சிறப்பு காணொளி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோது தனக்கு ஆதரவாக நின்ற தனது ஆதரவாளர்களுக்கு 19 வினாடிகள் கொண்ட சிறப்பு காணொளியில் நன்றி தெரிவித்துள்ளார். அந்தக் காணொளியில் முன்னாள் ஜனாதிபதி, ஆன்லைத் தளத்தில் இருந்தவர்கள் உட்பட தனது அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், தனக்கு ஆதரவளித்தவர்களை எதிர்காலத்தில் சந்திக்க விரும்புவதாகவும் அவர்...

பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கிரிபத்கொடை பகுதியில் இடம்பெற்ற காணி மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 28 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர நீதவான் நீதிமன்றத்தின் பிரதான நீதவான் காஞ்சனா என். சில்வா முன்னிலையில் பிரசன்ன ரணவீர இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக...

துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி...

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் மீனவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் மீனவர்களை  எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை மாலை உத்தரவிட்டார். இராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று நேற்று (29) ஞாயிறு  அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து  கைது செய்யப்பட்ட  ராமேஸ்வர...

நீதிமன்றில் முன்னிலையாகிய துஷார உப்புல்தெனிய!

சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை இன்று (11) சிறை அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அவர், நேற்யை...

துசித ஹல்லொலுவக்கு விளக்கமறியல்!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ ஜூன் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (6) கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான அரசாங்க சொத்துக்களை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக அவர் தற்போது...

குருந்தூர் மலை விவசாயிகளுக்கு மீண்டும் விளக்கமறியல்!

குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட இரு விவசாயிகளையும்  ஜூன் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதவான் நேற்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார். கடந்த 10ஆம் திகதி  குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் அக்காணியின் உரிமையாளர் தனது இரு பணியாட்கள் மூலம் உழவு இயந்திரத்தைக் கொண்டு குருந்தூர்...

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளவத்தை – ஹெவ்லொக் சிட்டி தொடர்மாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட T -56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம்...

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு முன் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார். இந்த...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விளக்கமறியலில்!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி வரை குறித்த 4 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், மன அழுத்தம் காரணமாக உயிர்மாய்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக...
- Advertisement -spot_img

Latest News

40,000 ரூபாய்க்கு குழந்தை விற்பனை! தாயும் அவரது நண்பரும் கைது

2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்றதாகக் கூறப்படும் ஒரு தாயையும் அவரது நண்பரையும் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், குழந்தையை...
- Advertisement -spot_img