Wednesday, July 22, 2026
No menu items!

#politics #government #elections #democracy #politicalissues #publicpolicy #politicaldebate #politicalnews #politicalanalysis #politicalcommentary

ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் இணைந்து முல்லைத்தீவில் போராட்டம்..!

முல்லைத்தீவு  மீனவர்களினால் இன்றைய தினம்(10) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாம் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமெனப் போராட்டத்தில்...

மதுவரி ஆணையாளராக யு.எல். உதய குமார பெரேரா..!

புதிய மதுவரி ஆணையாளராகச் சிறப்புத் தர அதிகாரி யு.எல். உதய குமார பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளராக பணியாற்றியவர். மதுவரி ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய யு. டி. என். ஜயவீர, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு யு.எல். உதய குமார பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தகர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..!

2025 மார்ச் 31 வரை பரேட் சட்டத்தின் இடைநிறுத்தத்தை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் கடனை செலுத்தத் தவறியதால், அவர்களின் சொத்துக்களை ஏலம் விடுவது இந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்றைய தினம்(10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்...

உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்காக இந்தியா செல்லவுள்ள ஜனாதிபதி..!

ஜனாதிபதி தனது இந்திய விஜயத்தை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி நிதியமைச்சர் ஆகியோர் தம்முடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி, இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர...

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு அமைக்க அனுமதி..!

நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்வது உள்ளிட்ட பல முன்மொழிவுகள் அமைச்சர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, குறைந்தபட்சம் 03 மாதங்களுக்கு போதுமான அத்தியாவசிய உணவுப் பொருள் இருப்புகளைப் பேணுவதற்கு, நாட்டில் தற்போதுள்ள உணவுப் பங்குகள் பற்றிய தரவு...

வைத்தியர்களின் ஓய்வு வயதில் மாற்றம்..!

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இது தொடர்பான நடவடிக்கைகள் அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என செயலாளர் மேலும் தெரிவித்தார்.

சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு..!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் (10) முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சார்த்திகள் ஆன்லைன் முறையில் பரீட்சைக்கு விண்ணப்பிக்க கடந்த நவம்பர் 5 முதல்...

தொழிலுக்காக 4,500 இலங்கை பணியாளர்கள் இஸ்ரேல் பயணம்..!

இஸ்ரேலில் நிர்மாணத்துறை தொழிலுக்காக 4,500க்கும் அதிகமான இலங்கை பணியாளர்கள் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் இரண்டு மாதங்களில் 1,802 பேர் தொழிலுக்காக இஸ்ரேல் செல்லவுள்ளனர். இஸ்ரேலில் நிர்மாணத்துறை தொழில் வாய்ப்புக்காக சீட்டிழுப்பு முறைமை மூலம் பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அரச கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் – ஜனாதிபதி..!

அரச கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டால் மாத்திரமே  இலங்கையை மீளக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று(09)  இடம்பெற்ற தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி...

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம் ரூபாய் மோசடி..!

நுகேகொடை பகுதியிலுள்ள ஒருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி அதிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்றைய தினம்(09)  உத்தரவிட்டார். கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட திலகரட்ன மாவத்தை பிரதேசத்தைச்...
- Advertisement -spot_img

Latest News

பஹ்ரைனில் அமேசோன் தரவு உட்கட்டமைப்பை தாக்கியதாக ஈரான் படை தெரிவிப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) பஹ்ரைனில் உள்ள அமேசோன் நிறுவனத்தின் தரவு உட்கட்டமைப்பை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. இது, ஈரான்...
- Advertisement -spot_img