Tamil News Channel

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

1545197397-Quash-Lakshman-Seneviratnes-parliamentary-membership-Chamara-Sampath-B

மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்று தொடர்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று பாராளுமன்ற உறுப்பினரை 2025 ஏப்ரல் 08 வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

அரச வங்கியொன்றில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை மீளப் பெற்றதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மார்ச் 27 அன்று வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

அவர் இராஜாங்க அமைச்சராக இருந்த முந்தைய காலத்துடன் தொடர்புடைய 03 ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஒரு ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts