Tamil News Channel

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள சுப்பர் சிக்ஸ் சுற்று

நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் நேற்றைய தினம் (28) 2 போட்டிகள் நடைபெற்றன.

முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் இந்தியா அணி 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அமெரிக்கா முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய வீரர் அர்ஸின் குல்கர்னி தெரிவாகியிருந்தார்.

இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 48.5 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய வீரர் ரையான் ஹிக்ஸ் தெரிவாகியிருந்தார்.

நாளை முதல் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கான போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளன.

நாளைய தினம் நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

மேலும், இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளும், மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளும் மோதவுள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts