ரவூப் ஹக்கீமின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறுமா?

0
5

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றுவருகின்றது.

இதில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வரவு செலவு திட்டத்தின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் பல யோசனைகளை முன் வைத்திருந்திருந்தார்.

இந்நிலையில், அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதே எமது கேள்வியாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த வருடம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகளில் 90 % ஆனவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை நாம் அறிவோம்.

அதேபோன்று அரசாங்கத்தினால் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here