நாளை (நவம்பர் 14) நடைபெறவுள்ள 2024 பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஆட்கள் பதிவுத் திணைக்களம் சில சேவைகளை இடைநிறுத்தியுள்ளது.
தேர்தல் நாளில் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தேர்தல் பணிக்காக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.







