தற்போதைய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வரலாற்று சாதனைப்படைத்து வருகின்றது.
இதனடிப்படையில், ஆடவருக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் 3 ஆவது பொஷிசன் பிரிவில் துப்பாக்கி வீரர் ஸ்வப்னில் குசலே தனது முதல் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இவர் தனது போட்டியை ஸ்வப்னில் 451.4 மதிப்பெண்களுடன் முடித்துள்ளார்.
இரண்டாவது இடத்தில் உள்ள உக்ரைனின் செர்ஹி குலிஷ் (461.3) மற்றும் தங்கப் பதக்கத்தை யுகுன் லியு (463.6) ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
ஸ்வப்னிலின் வெண்கலம் இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த மூன்றாவது பதக்கமாகும்.








